Dienstag, Dezember 19, 2006

Bala Anna

Editorial Tamil Guardian 17 December 2006

His driving purpose was always the well being of his people, as all those who engaged with him from any side of the table quickly came to understand. It is entirely in character that his final public words in November, confirming his diagnosis with cancer, were mainly about the plight of the Tamil people. He loved us as much as we adored him.



News that Mr. Anton Balasingham had passed away after a brief battle with cancer was met this week with shock and profound grief across the Tamil community. In the thirty years he was associated with the Tamil freedom struggle, he had truly become a legend in his own time. He was the LTTE’s theoretician for thirty years and its chief negotiator for most of that time. In that period, a fledgling guerilla group dedicated to the emancipation of the Tamil people grew and expanded into a national liberation movement with a powerful military and an apparatus of civil administration, while Bala Anna became an icon of the Tamil cause.

Mr. Balasingham was many things to the Tamil struggle. The formal titles of theoretician and chief negotiator do not capture them all. Within the LTTE he was a father figure. His door was always open to cadres and commanders alike. No subject was taboo, confidentiality was assured. Most importantly, of course, he was the struggle’s political strategist. Beyond the LTTE, he was approached for advice and guidance by a range of Tamils, from parliamentarians to journalists, supportive of the cause of freedom. He was eloquent in formal Tamil, but he could also address us in the colloquial, unraveling the complexities our struggle faced and bringing every one of us closer to it. Which is why his public addresses were so eagerly awaited.

It was Mr. Balasingham’s demonstrably keen intellect and political acumen that compelled LTTE leader Vellupillai Pirapaharan to ask him in 1979 to join the tiny group of young revolutionaries their movement then was. (And it was Mr. Balasingham’s recognition of Mr. Pirapaharan’s abilities as a leader and the LTTE’s institutional strengths that persuaded him to throw in his lot with the Tigers rather than any of the many other Tamil militant groups setting out on the long road of struggle.) The strength of the personal bond that grew between them is reflected in Mr. Pirapaharan’s poignant words this week as he awarded Bala Anna that unique title ‘Voice of the Nation.’

Nothing captures what Bala Anna meant to the Tamils as that title does. For three decades he spoke for us, the Tamil people. He led LTTE delegations in five attempts to negotiate a political solution with the Sinhala state. He represented us in our dialogue with the international community, both in public fora and private discussion. He explained the oppression we endure and defended our struggle for freedom. He was a formidable representative, aggressively and adeptly pursuing our interests. He could not be intimidated – though it was often tried. His razor sharp intellect was matched by a powerful personality.

But he was, as one commentator puts it, a quintessential negotiator. Amidst the heat of dispute he could find the sites of compromise. And, armed with the complete trust of the LTTE leadership, he would compromise – but not surrender. Thus he earned the begrudging respect of his interlocutors, both Sinhala and international. His driving purpose was always the well being of his people, as all those who engaged with him from any side of the table quickly came to understand. It is entirely in character that his final public words in November, confirming his diagnosis with cancer, were mainly about the plight of the Tamil people. He loved us as much as we adored him.

It is inevitable that Mr. Balasingham’s passing has brought joy to our enemies. Reflecting the character of some of them, there has been public jubilation at his death in parts of the south - just as when his illness was announced last month. This ugliness is characteristic of the oppression we fight.

It also reflects a misunderstanding of what Mr. Balasingham’s multi-faceted role was, of where the LTTE now is as a movement and where the Tamils are as a nation. The growth of LTTE over the past three decades has been inexorable, despite the ferocious violence unleashed on it and the Tamil people by the Sri Lankan state and its allies. Mr. Balasingham contributed immeasurably to that growth. His analytical, calculative approach has been institutionalized. Every arm of the LTTE routinely weighs its decisions before committing to a course of action, the long-term benefit to the Tamil cause the overarching priority. As the LTTE’s multi-faceted international engagement has grown in scale and complexity, new capabilities have emerged, both in the LTTE and wider Tamil nationalist movement. Mr. Balasingham guided many of these, devising strategies and advising key individuals. As deepening illness precluded a frontline role for Mr. Balasingham for much of this year, he was able to rest, secure his many tasks were being competently carried forward by others. The extent of his legacy will only be discernible in the fullness of time.

This newspaper and its staff are privileged to have had a very special relationship with Bala Anna. It began soon after he arrived in London in 1999. He readily agreed to meet the volunteers of the Tamil Guardian when we asked. Our discussions quickly became regular and frequent. We always met at the study in his home, where we were warmly welcomed by him and his wife, Adele. An experienced journalist, Mr. Balasingham had a passion for media. He also appreciated that we were committed to articulating the Tamil cause. He spent considerable time with us in prolonged discussion on the ethnic question, on the Tamil struggle, on international affairs, and many other subjects. The depth of his knowledge was unfathomable. A warm, convivial and humorous man, he was a patient tutor. He scrutinized our work and was generous with his praise and scathing in his criticism. Yet he never constrained us, encouraging us to write freely on the Tamil cause. As with a handful of other Tamil correspondents, he took us into his confidence in exchange for our discretion. In March 2000 we were privileged to be exclusively granted his first media interview after leaving Vanni. He gave many of his infrequent subsequent interviews to us.

Our relationship with the Balasinghams went beyond the production of the newspaper. It was individual, personal and very affectionate. They took an active interest in each of us, inquiring of those who met them about those who were not there. Bala Anna encouraged us to develop our individual interests and offered welcome advice on our academic and professional pursuits. We drew much inspiration and not a little courage from him. Being close to Bala Anna, we were, for a long time, acutely aware of his health difficulties. His health declined rapidly this year, but only until recently were we unable to converse regularly with him. His death comes as a devastating personal loss to each of us. Our hearts go out to Adele Aunty, his beloved wife and constant companion. Her loss is the deepest. We will all miss him very much. We, at the Tamil Guardian, couldn’t be more proud of our close association with Mr. Balasingham over the past seven years. He was, quite simply, a remarkable man.

Quelle - Tamil guardian(19 December 2006)

Mittwoch, Dezember 06, 2006

யேர்மனியில் மாவீரர் குடும்பத்தினர் கௌவிரப்பு.

யேர்மனியில் மாவீரர் பெற்றோர் மற்றும் மாவீரர் குடும்பத்தினர் கௌவிரப்பு.

திங்கள் 27-11-2006

இன்று 27.11.06 அன்று யேர்மனியில் உள்ள வூப்பெற்றால் நகரில் மாவீரர் குடும்பத்தினர் கௌரவிக்கப்பட்டார்கள்.

இன்று மதியம் 12.30 மணிக்கு தேசியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பித்து இந் நிகழ்வில் தேசியக்கொடியினை கப்டன் மொறிஸ், மற்றும் கப்டன் மயூரன் ஆகிய மாவீரர்களின் தாயார் திருமதி.தியாகராஜா ஏற்றிவைத்தார்.

இதனை தொடர்ந்து தேசியத்தலைவர் அவர்களின் மாவீரர்நாள் உரை நேரஞ்சலாக திரையில் காட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது பொது ஈகைச்சுடரினை மாவீரர் திருஞானசம்பந்தர் கஜேந்திரராஜனின் சகோதரி திருமதி கஐதீஸ்வரி குமணன் ஏற்றி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அங்கு வருகை தந்திருந்த மாவீரர் குடும்பத்தை சார்ந்தவர்கள் மாவீரர்களின் நினைவுகளை மீட்டது மிகவும் உணர்வு பூர்வமாக இருந்தது. வித்தாக வீழ்ந்த மாவீரர்களின் கனவான தமிழீழத்தை அடைவதே எமது விருப்பம் என மாவீரர் குடும்பத்தை சார்ந்தவர்கள் கூறியதை காணக்கூடியதாகவிருந்தது. தேசியக்கொடி இறக்கி வைக்கப் பட்டதுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

Montag, Dezember 04, 2006

about me - chandravathanaa

நான் எல்லோரும் போல சாதாரணமானவள்தான்.
பருத்தித்துறையில் ஆத்தியடி என் பிறப்பிடம்.
எண்மரில் நான் இரண்டாவது.
பெண்களுள் மூத்தவள்.

படிக்கும் போது கணிதத்துறையில் புலி. உயர்தரவகுப்புகளில் எனது கணக்கிடும் வேகத்தின் காரணமாக ஆசிரியர்களால் "computer" எனப் பட்டமிட்டு செல்லமாக அழைக்கப் பட்டேன்.

தற்போது கணிதத் திறமையைக் காட்டக் கூடிய தளங்கள் என் வசம் இல்லை.

இத்தனை கெட்டித்தனம் இருந்தும் பிரயோககணிதம், தூயகணிதத்தில்(Algebra, Geomatry இரண்டிலும்), 100 புள்ளிகளைத் தவறாமல் பெற்றும், காதல் கண்ணை மறைத்ததால் Architect அல்லது ஒரு Engineer ஆக வரும் கனவையும், பல்கலைக்கழக அனுமதியையும் குழிதோண்டிப் புதைத்து விட்டு கல்யாணம் செய்து விட்டேன்.

கனவுகள் கலைந்ததில் என்னை விட அதிகமாகக் கவலைப் பட்டது எனது அப்பாவும் அம்மாவும்தான். அடுத்து எனது அண்ணன். தொடர்ந்து எனது ஆசிரியர்கள் மற்றைய சகோதரர்கள்.

திருமணத்தின் பின் தொடர்ந்து படிக்க விடுவதாகத்தான் எனது கணவர் எனது பெற்றோருக்கு வாக்குறுதி கொடுத்தர்ர். திருமணமான அடுத்தநாளே வாக்குறுதி காற்றில் பறக்க... பத்து மாதத்தில் எனது மூத்தவன் திலீபன் என் கைகளில் தவழ... எனது உலகம் வேறாகி விட்டது. நான் படிப்பைப் பற்றி மீண்டும் சிந்திக்கத் தொடங்கிய போது எனக்கு மூன்று குழந்தைகள். செயற்பட முடியவில்லை. அவர்கள்தான் என் உலகமாகி விட்டார்கள்.

84 இல் கணவரின் புலம் பெயர்வு. 86 இல் மூன்று குழந்தைகளுடன் கணவனை நோக்கிய என் புலம் பெயர்வு. ஜேர்மனிய வாழ்க்கை மிகத் துயரமாய் எதிலும் ஒட்ட முடியாததாய் வதைக்க... ஊர் நினைவுகளோடு வாழ்கையில்...

1989 இல் என்னை விட 10 வயது இளைய எனது தம்பியின் வீரமரணம்.
துயரம் என்றால் என்ன என்று அப்போதுதான் உணர்ந்தேன். அவன் இழப்பில் நிறையவே பண்படுத்தப்பட்டேன்.

1993 இல் எனது மற்றத் தம்பியின் - 11 வயது இளையவன் - வீரமரணம்.
கண்ணீரை விட துயரம்தான் நிரம்பி வழிந்தது.

1997 இல் மருத்துவம் சதி செய்ய அப்பாவின் மரணம். இறுதி ஒரு கிழமையை வவுனியா வரை சென்று அப்பாவுடன் கழித்த திருப்தியில் துயரத்தைக் கழுவினேன்.

2000 இல் அண்ணனின் மரணம் (அவருக்கு அப்போ 42 வயதுதான்.) 1990 இலேயே ஷெல்லில் ஒரு காலையும், ஒரு கையின் செயற்பாட்டையும் இழந்திருந்தார். (கவிஞன்.) எதிர்பாராத அவரின் இழப்பில் சில காலங்கள் நான் எழுத மறந்து, என்னையே தொலைத்து ஏதோ ஒருவித மனஉளைச்சலுடன் வாழ்ந்தேன். துயரம் என்னைக் கொன்றது. மீண்டும் நான் நானாக.... நீண்ட காலங்கள் தேவைப்பட்டன.

எனது சந்தோசங்களாக எனது மூன்று குழந்தைகள். வளர்ந்து விட்டார்கள்.

மகன் - திலீபன். (Dipl.Betriebswirt BA, Fachrichtung Wirtschaftinformatiker)
ஜேர்மனியில் வங்கியொன்றில் உயர் பதவியில்.
மனைவி ராதிகாவுடனும் குழந்தை நதியுடனும் குடும்ப வாழ்க்கை.

மகள்- தீபா
லண்டனில் வங்கியொன்றில் வேலை.
கணவர் ராகுலனுடனும் குழந்தைகள் சிந்து & நிலாவுடனும் வாழ்க்கை.

மகன்- துமிலன். (Redakteur - Editor)
கணினித்துறை என்ஜினியரிங், புரோக்கிராமிங் என்று படிப்புகள். ஆனாலும் Journalist ஆக வருவதில் ஆர்வம் அதிகம் இருந்ததில் பத்திரிகைத்துறைக்குள் இருக்கிறான்.

கணவர் - ஓவியப் பிரியர்- Cartoon வரைவார். நாடகங்களும் எழுதுவார். தனது இளமைக்கால நினைவுகளை இங்கு பதிகிறார்.

எனது எழுத்துக்கள் பற்றி பின்னர் சொல்கிறேன்.

சந்திரவதனா
6.2.2005

மீள்பதிவு - 4.12.2006

Freitag, November 24, 2006

திருமண வாழ்க்கை கசப்பானதா?!

S. அருள் குமார்
சென்னை, இந்தியா.
Tuesday, November 21, 2006

http://whatiwanttosayis.blogspot.com/2006/11/blog-post_21.html


By chandravathanaa, at Fri Nov 24, 11:19 AM
நல்ல பதிவு அருள்குமார்.
வாசிக்க வாசிக்க நீண்டு கொண்டே போன பதிவை, இடைநிறுத்தவும் முடியாத விதமாக எழுதியிருக்கிறீர்கள்.

திருமண பந்தந்தில் சுதந்திரம் பறிக்கப் படுவது தவிர்க்க முடியாததே. விட்டுக்கொடுப்புகளாலும் புரிந்துணர்வுகளாலும் மட்டுமே அதைச் சரிப்படுத்த முடியும்.

பெண்கள் தங்கள் சுதந்திரம் பற்றிய நினைவேயில்லாத, ஆண்களைச் சார்ந்திருப்பதே அழகென்று நினைத்திருந்த காலம் வரை, குடும்பம் என்கிற அமைப்பு நன்றாகவே இயங்கிவந்திருககிறது.

மிகச்சரியான கருத்து. ஆனாலும் இங்கும் சிலரால் புரிந்து கொள்ள முடியாத பிரச்சனைகளும் இருக்கின்றன. எல்லோருமே அப்படி வாழ்ந்த பெண்கள் எல்லோரும் மிக மகிழ்வாக வாழ்ந்ததாகவே கருதுகிறார்கள். அதை நூறுவீதம் திடப்படுத்தியும் எழுதுகிறார்கள். ஆனால் இப்படி வாழ்ந்த பெண்களில் பலர், குடும்பம் குலையாமல், குடும்பத்தில் உள்ள அத்தனை பேரையும் திருப்திப் படுத்திக் கொண்டு தமக்குள் குமுறிக் கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள். இந்த உண்மையைப் புரிந்து கொண்டவர்கள் வெகுசிலரே. அந்தக் காலத்தில் குடும்ப அமைப்பு நன்றாகவே இயங்கி வந்திருக்கிறது. அதுசரி. அத்தனை பெண்களும் சந்தோசமாக வாழ்ந்தார்களா என்பது கேள்விக் குறியே.

உஷா குறிப்பிட்டது போல பிள்ளைகள் வளர்ந்த பின் அவர்களால் ஒரு பெண் பலம் பெறுகிறாள். அங்கே எவ்வளவுதான் துள்ளிக் குதிக்கும் கணவனாக இருந்தாலும் அவன் கொஞ்சமேனும் அடங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

அகிலாவின் குடும்பம் மகிழ்ச்சியை எமக்கும் தரக் கூடிய குடும்பம்.

Montag, Oktober 23, 2006

இணைய இதழா, அச்சிதழா? எது நீடிக்கும்?

பேராசிரியர் அ.பசுபதி(தேவமைந்தன்)

http://poongaa.com/content/view/382/10047/

ஓர் இதழ் மிகுந்த விற்பனையுள்ளதா, குறைந்த விற்பனை உள்ளதா, அப்படியாயின் அது பேரிதழா சிற்றிதழா என்ற வினா மறைந்துபோய், இணைய இதழா அச்சிதழா இன்றைய வளர்ச்சியில் எது நீடிக்கும் என்ற வினா உலகம் முழுதும் எழுந்துள்ளது.

இணைய இதழ், அச்சிதழ் - இவற்றுள் எது சிறந்தது? என்ற வினாவைத் திண்ணை இணைய இதழில் (ஆகஸ்ட் 10, 2006;வியாழன்) எழுப்பியுள்ளார் ஜெர்மனியில் வாழும் சந்திரவதனா செல்வகுமாரன்.

இணைய இதழ்களின் வரவால் இன்றைய இன்றைய ஜெர்மனிய இதழ்கள் ஆட்டம் கண்டுள்ளன, என்கிறார் அவர். இந்த நிலையில் நமது இதழ்கள் நாளேடுகளின் எதிர்காலம் எப்படி அமையப் போகிறது என்று ஆர்வமுறுகிறார். ஈழத் தமிழர்கள், பன்னாட்டுத் தொடர்பும் இடையூடாட்டங்களும்[interactions] கொண்டவர்கள் என்பதால் அவர் எழுப்பியுள்ள வினா, அவர்களைப் பொறுத்தவரை பொருள் மிகுந்ததுதான். கரணியம், அவர் விதந்தோதியுள்ள 'பூவரசு' என்ற இதழ், தன் பதினேழாவது ஆண்டில் தொடர்ந்து அச்சுப் பதிப்பாக வருவதா அல்லது இணைய இதழாகி விடுவதா என்ற இக்கட்டுக்கு உள்ளாகி இருக்கிறது.

புலத்தில் படைப்பாளரும் இதழ் வெளியீட்டாளரும் மிகுந்த பண நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். உள்ளூரில் வெளியாகும் பேரிதழ்கள்தாம் படைப்புகளுக்குப் பணம் தர முடியும். வேறுவகையில் சொன்னால் புலத்தில் வெளியாகும் பரவலான வாசிப்புடைய இதழின் வெளியீட்டாளருக்கு உள்ள பொருளியல் நிலையும் உள்ளூரில் நடத்தப்பெறும் சிற்றிதழ் வெளியீட்டாளருக்குள்ள பொருளியல் நிலையும் ஒன்றேதான். இணைய இதழ் நடத்துவோர் ஆண்டுக்குச் செலவிடும் தொகை, பரவலான சிற்றிதழொன்றுக்கு மாதமொன்றுக்குத்தான் சரிவரும். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இப்பொழுது ஒரு காசும் செலவு செய்யாமல் இணைய இதழை நடத்தும் வாய்ப்பை இணைய நிறுவனங்கள் தர முன்வந்திருப்பதுதான். பணத் தட்டுப்பாட்டுடன் இணைய இதழை நடத்தி மாய்வதைவிட, வருமானத்துக்குரிய பணியொன்றைச் செய்துகொண்டே மனநிறைவுடன் தொடர்ந்து தன்னிதழை, மேலதிகமான வாசகர்ப் பரப்புடன் நடத்தக்கூடிய வாய்ப்பு வருகிறதெனில் விடுவாரா, அவ்வாறு இக்கட்டில் உள்ள ஓர் இதழாசிரியர்? 'பூவரசு' இதழாசிரியரைக் குறித்து நான் இவ்வாறு சொல்லவில்லை. ஏனெனில், அவர் அதை வாசகரிடம் விட்டிருக்கிறார். அவர்கள் எவ்வாறேனும் அவ்விதழைத் தொடர்ந்து நடத்தவே வேண்டும் என்று கருத்துரைத்திருக்கின்றனர்.

பழகிவிட்ட கண்களுக்கு, அச்சுப்பதிப்பாக வரும் இதழ் தரும் மனநிறைவு இணைய இதழால் வராது. இது உண்மையே என்றாலும், தொடர்புடையதே. பொதுவாக இன்றைய தலைமுறையில் உள்ள வளரிளம் பருவத்தினர் இணைய இதழை வாசிக்கவே விரும்புகின்றனர். நான் வழக்கமாக இணையமுலவும் நடுவத்தில், அதை நடத்துபவர் ஒழுங்குக்கு முதன்மை கொடுப்பவரென்பதால், ஆக்கவழியில் இணையமுலவும் வளரிளம்பருவத்தினர் பலர் வந்து செல்கின்றனர். அவர்களுள் பல்கலை மாணவர் ஒருவரிடம் இது குறித்துக் கேட்டபொழுது, தமிழ்நாட்டில் விற்பனையில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் வார இதழ் ஒன்றை, நாள்தோறும் பகுதி பகுதியாக அவர் படிக்கிறார் என்றும் ஏணைய இணையம் உலவும் பொழுதைத் தன் ஆய்வுப் பணித்திட்டம் உருவாக்கச் செலவிடுகிறார் என்றும் அறிந்து கொண்டேன்.

அந்த வார இதழ் விலை பத்துரூபாவுக்கும் குறைவுதானே, ஒரு முறை வாங்கிக் கொண்டால் போதுமே, கையிலோ பையிலோ வைத்துக் கொண்டு இதேபோல் வாரம் முழுதும் வாசிக்கலாமே என்று கேட்டேன். அவர் சொன்ன மறுமொழி என்னைப் பெரிதும் ஆச்சரியப்பட வைத்தது. "ஒரு மணிநேரத்துக்கு இங்கு இணையம் உலவப் பதினைந்து ரூபா. இதே சாலையில் மேல்நிலைப் பள்ளியருகில் பன்னிரண்டு ரூபாதான். சூழ்நிலை, அப்பா வழங்கும் கைப்பணம் ஆகியவற்றைப் பொறுத்து அங்கும் இங்கும் இணையமுலவுவேன். பணித்திட்டத்தைத் தரவுகளிலிருந்து தட்டெழுதும்பொழுது சலிப்பு வரும். அப்பொழுது, வந்தவுடன் முகவரியிட்டு வரவழைத்து சுருக்கி(minimise)வைக்கும் அவ்விதழை விரிவாக்கி வாசித்துவிட்டு மீண்டும் பணித்திட்டத்தில் இறங்குவேன். இதனால் எனக்கு வேலையும் நடக்கிறது. நான் விரும்பும் இதழை இலவசமாகவே வாசிக்கவும் முடிகிறது. அதை வாங்கி, அடுத்தவர் கேட்டு, அவருக்குக் கொடுத்து, திரும்பப் பெற துன்பப்படவும் வேண்டியதில்லை. தூசியுமில்லை. பழையதாள் கடைக்குச் சுமந்து சென்று தொல்லைப்பட வேண்டியதுமில்லை" என்றார் அவர். என் அடுத்த வினாவையும் கேட்டேன். "நீங்கள் வாசிக்கும் இதழ் முழுவதையும் இலவசமாகத் தருவதில்லையே! கதை, கட்டுரைகளின் முதற்பகுதியைத்தானே தருகிறார்கள்..'மேலும் வாசிக்க' என்று கேட்டால், நம் மின்னஞ்சல் முகவரி கேட்கிறார்கள். தொகை அனுப்பச் சொல்கிறார்களே..." என்றேன். அவர் மர்மமான புன்னகையொன்றை உதிர்த்தார். "குறிப்பிட்ட சாவி மட்டும்தான் பூட்டைத் திறக்குமா?" - என்று விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளத்தின் பாணியில் வினாவொன்றை உதிர்த்துவிட்டு, தன் ‘டூவீல’ரைக் கிளப்பிக்கொண்டு போய்விட்டார்.

"இணையங்களின் வரவுக்குப் பின், குறிப்பாக வலைப்பதிவுகளின் வரவுக்குப்பின் [அச்சுப்] பதிப்புகளோடான ஊடாடல் வாசகர்களிடையே குறைந்துவிட்டதுதான் அப்பட்டமான உண்மை" என்று சொல்லும் சந்திரவதனா, "எப்போதுமே [அச்சுப்] பதிப்பாக வரும் ஒன்றுக்கு இருக்கும் தனித்தன்மை இணைய இதழ்களுக்கு இல்லை.." என்ற தெளிவான கருத்துடையவர் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

அதனால்தான், நானும், எனக்கென்று மூன்று இணைய வலைப்பதிவுகள் உள்ளபொழுதும் அவற்றை விடாது இடுகைகளிட்டு நிகழ்த்துவதுடன், தொடர்ந்து அச்சிதழ்களுடன் ஊடாடியும் படைப்புகள் தந்தும் வருகிறேன்.

இளந்தலைமுறையினரில் விதிவிலக்கானவர்களைத் தவிர எல்லோரும் வகைவகையான ‘மொபைல்’களுக்குச் செலவிடுகிறார்கள்; ‘ஸ்ப்ரே’க்களுக்குச் செலவிடுகிறார்கள்; திரைப்படங்களுக்குச் செலவிடுகிறார்கள்.[திரைப்படம் ஒன்றுக்குச் சீட்டு, நொறுக்குத் தீனி, ‘சாஃப்ட் டிரிங்ஸ்’ ஆகியவற்றுக்கு ஆகக்குறைவாக ஐம்பது ரூபாவாவது தனக்குச் செலவாவதாக தொ.கா.'வில் ஓரிளைஞர் குறிப்பிட்டார். தான் நண்பர்களுக்குச் செலவிடுவதோ, கெட்ட பழக்கங்களுக்குச் செலவிடுவதோ இல்லை என்றார். தனக்குப் பிடித்த படத்தை இவ்வாறு குறைந்தது ஏழு,எட்டு முறையாவது பார்த்துவிடுவாராம். "ஒரு வாரத்துக்கு எத்தனைப் படம் பார்ப்பீர்கள்?" என்ற கேள்விக்கு, "எப்படியும் ஏழுக்குக் குறையாது!" என்றார். வாரத்துக்கு ஏழு நாட்கள்தாமே!...] ஆனால் புத்தகத்தையோ, இதழையோ காசு கொடுத்து வாங்க விரும்புவதில்லை. தரமான இதழ் என்றால் சொல்ல வேண்டுவதே இல்லை. பணிக்குச் செல்லும் பெண்டிரும், இல்லத்தரசியருள் பலரும் வாடகை நூலகங்களையே பெரிதும் பயன்படுத்துகின்றனர். எட்டு ரூபா இதழை இரண்டு ரூபா வாடகைக்குத் தரும் அத்தகைய நூலகங்களுக்குப் போட்டியாக, ஒரு ரூபாவுக்கே தரும் ‘மொபைல்’ வாடகை நூலகங்களும் உள்ளன. ‘டி.வி.எஸ். டூவீலர்’ அதற்கு வசதியாக உள்ளதாம். இணையம் உலவுவோரில் தொண்ணூறு சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள், இதழ்களை விலைகொடுத்து வாங்கி வாசிக்கும் மனம் இல்லாதவர்கள் என்பதே உண்மை. எதிர்வரும் 2010ஆம் ஆண்டளவில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள - ஐம்பது அகவைக்கு மேற்பட்டவர்களே இதழ்களை வாசிப்பார்கள் என்கிறது ஆராய்ச்சி.

இதழ்கள் சிலவற்றுக்குப் படைப்புகளை அனுப்புவோர், தம் படைப்பு அதில் வெளிவந்துள்ளதா என்பதை அறிய, அவற்றை விலை கொடுத்து வாங்கிப் பார்த்தே அறிந்தாக வேண்டும் என்று கேள்விப்படுகிறேன். அதே பொழுது, மூன்று உறுப்பினர்களைச் சேர்த்துவிட்டால், சேர்த்து விடுபவருக்கு இலவசமாக இதழைத் தொடர்ந்து அனுப்பும் இதழ்களும் உள்ளன. படைப்பாளருக்கும் புரவலருக்கும் தனித்தனியே இதழ்களைப் பொறுப்பாக அனுப்பித் தரும் இதழ்கள் உள்ளன. இணைய இதழ் எனில் இந்தச் சிக்கல் எதுவுமில்லை.

காலாண்டிதழ் ஒன்று. அதன் ஐந்தாவது இதழை வாசித்து முடித்துவிட்ட பின்பு, அதன் முன்னிதழ்கள் பாதுகாப்பாக வைக்கப்பெற்றுள்ள[ஓதமில்லாமல் வறண்ட]இடத்துக்குச் சென்று பார்த்தேன். முதலாம் இதழும் இரண்டாம் இதழும் பழுப்பாகி அச்செழுத்துகள் மங்கித் தெரிந்தன. இணைய இதழ் அவ்வாறில்லை. மின்னூலும் அப்படியே. இப்பொழுது கூகிள் தேடுதளத்தில் 'மரபுத் தொடர்கள்' என்று தட்டெழுதித் தேடினால் இலவசமாகக் கிடைக்கும் சோலைக்கிளி அவர்களின் 'காகம் கலைத்த கனவு' என்ற முழு மின்னூல், மதுரை மின் நகலகத் திட்டத்தாரால் உருவாக்கப் பெற்றுள்ளது. அதன் தலைவர், சுவிட்சர்லாந்தில் வாழும் டாக்டர் கல்யாணசுந்தரம் அவர்கள். ஜெர்மனியில் வாழும் திரு கண்ணன் அவர்கள், அத்திட்டத்தின் செயலாக்க ஆசிரியர். வடிவான நூல். என் மேசையின் சிறிய இழுவியுள் அது போன்ற இருநூறு நூல்களை வைத்துக் கொள்ள முடியும். இணைய இதழ்கள் பலவற்றை, "எதைக் கொண்டு போனோம்! அதைக் கொண்டு வருவதற்கு!" என்ற எதிர்மறை முறையில், உலவுபுலங்களில் வாசித்துவிட்டு வந்து விடுகிறேன்.
'புதுச்சேரி' மின்னிதழை வாசிக்கும்பொழுதே கூடல், வார்ப்பு, திசைகள், தமிழோவியம், மரத்தடி, முத்தமிழ் மன்றம், திருக்குறள், எழில்நிலா, தமிழம், அன்புடன் புகாரி, அம்பலம், ஆறாம் திணை, கதம்பம், தமிழமுதம், தமிழ்மண், பதிவுகள், நிலாச்சாரல், நம் நாடி, சிஃபி, இ-சங்கமம், தமிழன் எக்ஸ்பிரஸ், கல்கி, மங்கையர் மலர், விகடன், குமுதம், திண்ணை, கீற்று ஆகிய இணைய இதழ்களையும் சுட்டிசொடுக்கி வாசித்துவிட முடிகிறது. இவற்றுள் கூடல், முத்தமிழ் மன்றம், திருக்குறள், தமிழம், தமிழமுதம், நிலாச்சாரல், சிஃபி தமிழ் ஆகியவை இணைய தளங்களும் கூட. குமுதம்(=குமுதம் குழும இதழ்களான தீராநதி முதலியவை), விகடன்(+ விகடன் குழும இதழ்களாகிய சுட்டி விகடன் முதலியவை), தமிழன் எக்ஸ்பிரஸ், மங்கையர் மலர், கல்கி ஆகியவை அச்சிதழ்களாகவும் இணைய இதழ்களாகவும் ஒரே நேரம் வெளிவருபவை. ஏன் இவை அச்சிதழ்களாக மட்டும் வெளிவரவில்லை? இவ்வாறு இணைய இதழ்களாகவும் வந்தால்தான் மேலும் பரவலான பன்னாட்டு வாசகர் வட்டத்தைப் பெறமுடியும் என்பதே விடை. இன்னும் மின்னிதழ்களாக வரும் நாளேடுகளும் உள்ளன அல்லவா? தினகரன், தினத்தந்தி, தினமலர் முதலானவையும் அவ்வகையில் குறிப்பிடத் தகுந்தவை.

ஆகவே, மேற்குறிப்பிட்ட செய்திகளை வைத்துப் பார்க்கும்பொழுது, இன்றைய நிலையில் தரமானதோர் அச்சிதழாக வரும் ஒன்று, நீடித்து எதிர்காலத்திலும் தொடர்வதோடு நிலையாகவும் இருக்க வேண்டும் என்றால், மின்வெளியில்(Cyber Space)நுழைந்து இணைய இதழாகவும் திகழ வேண்டும் என்பது தெளிவாகிறது.

http://kalapathy.blogspot.com/2006/10/blog-post_116106401618516138.html

Quelle - Poonga-6-23.10.2006

தொகுப்பாளரின் மேசையிலிருந்து

ஆசிரியர் குழு


Poonga ithazh - 6
23.10.2006
http://poongaa.com/component/option,com_magazine/Itemid,1/

பண்டிகைகள் வருவதும் பழங்காலத்திலே வால்வெள்ளி வருவதும் ஒன்றேதான். வரப்போவதையிட்டு எதிர்பார்ப்புகளோடு திட்டங்கள் தீட்டுவதும் வந்தபொழுதில் அதை உணரப் பொழுதின்றி சடங்குகளுக்குள் முயங்குவதும் சென்றபின்னால், கழிந்ததையிட்டுப் பேசுவதிலும் ஆகிவிடுகின்றது. பண்டிகை ஒன்றின் நோக்கு, ஒருவர் நாளும் தான் வாழமுடியாத எதிர்பார்ப்புகளுக்கு நாளொன்றேனுங் குறித்து தீனி போட்டு மகிழ்ந்திட முயற்சிப்பதுதான். ஆனால், சடங்குகள் - மதம் சார்ந்த பழையனவோ, களியாட்டம் சார்ந்த புதியனவோ - பண்டிகைகளின்போது, ஒருவரின் பொழுதினை அவருக்கென்று தனிப்பட்ட விட்டுக்கொடுக்க முடியாத அளவுக்கு அமுக்கிவிடுகின்றன. மதச்சடங்குகளின் வளையத்திலிருந்து ஓரளவுக்கு வெளியேறிய மக்கள், தொலைக்காட்சி, திரைப்படங்களின் வளையத்துக்குள்ளே நுழைந்து நெரிந்துகொள்ளும் அவலத்தினை அண்மைக்காலத்திலே கண்டுவருகிறோம். இன்னொரு புறம், அரசியற்சூழலின் அவலமும் அகதிச்சிதறலும் பலருக்கு இனிதான பழைய பண்டிகைத்தினங்களைப் புதிய பண்டிகைப்பொழுதினைத் துயர்பொழுதாக்கும் கூரிய ஆயுதங்களாகவும் மாற்றிவிடுகின்றன. இவ்வாரப்பூங்காவின் கட்டுரைகளும் சந்திரவதனாவின் கவிதையும் இவ்விடயங்களைச் சுற்றி எழும்பியிருக்கின்றன.

வீரவன்னியனின் 'சிவகாசிப்பிஞ்சுகள்' கட்டுரை பண்டிகைகளின் மிகவும் அறியப்பட்ட, கெடுதலான மறைமுக விளைவொன்றைப் பேசுகின்றது. பண்டிகைகளினை முன்னிட்டுக் கரியாக்கப்படும் மத்தாப்புக்களினதும் தீக்குச்சுகளினதும் உரசல்களிலே எரிந்துபோகும் பிஞ்சுகளின் அவலத்தினைப் பேசுகின்றது. இது குறித்தும் உடலளவிலும் உளமளவிலும் எரிந்துபோகும் இக்குழந்தைகள் குறித்து, அவ்வப்போது பேசப்பட்டாலுங்கூட, குறிப்பாக, இந்தியாவிலே குழந்தைகள் தொழில்புரிதல் தடைசெய்யப்பட்டிருக்கும் இம்மாதத்திலே இக்கட்டுரையின் அவசியம் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. சிவகாசியின் தொழில்வளம் குறித்தும் பட்டாசுத்தொழிற்சாலைகள் தரும் பொருளாதாரம் பற்றியும் அள்ளித்தரும் தளமெதுவுமே இக்குழந்தைகள் பற்றிப் பேசாமலிருப்பது மிகவும் கவலைக்குரியதும் கவனிக்கப்படவேண்டியதுமாகும். சிவகாசிப்பிஞ்சுகள் கட்டுரை, தன்னளவிலே இளமையிலேயே கருகிப்போம் இம்மத்தாப்புகளின் இருப்பினை - இறப்பினை- மட்டுமே பேசினாலுங்கூட, இதற்காக இணையத்தமிழர்கள் என்ன செய்யமுடியுமென எண்ணுவதற்கான ஆரம்பப்பொறிப்புள்ளியாகவே நாம் இக்கட்டுரையை எடுத்துக்கொள்ளலாம். இதனோடு பூங்காவின் கவனத்தினை ஈர்த்த சபாபதி சரவணனின் ஆதங்கக்கட்டுரை அலட்சியத்தின் விளைவான குழந்தைகளின் அநாவசிய இறப்புகள் குறித்தது.




இக்குழந்தைத்துயரங்களுக்கு மாறாக, குழந்தைகளின் மகிழ்ச்சியினை அவர்களே மையப்படுத்தித் தெறிக்க, அஞ்சலி, மழலை ஆகியோரின் வண்ணமயமான உலகங்கள் உங்கள் முன்னே பூங்காவிலே சுழல்கிறன.


நடைமுறைக்கும் காலவோட்டத்துக்கும் தன்னை நல்லபடி இணைத்துக் கூர்த்துக்கொள்ளாத மொழி, சுவடிகளிலேமட்டும் உறைந்திருக்கும் மொழியாகச் செத்துவிடும். இக்கண்ணோட்டத்திலே, அண்மைக்காலங்களிலே தொழில்நுட்ப, அறிவியல், மருத்துவச்செய்திகளும் கட்டுரைகளும் விரிந்தும் ஆழங்கொண்டும் புதிதாகவும் பெயர்க்கப்பட்டும் தொழில்முறைசார்ந்தோரால் தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கப் புறப்படுவது இணையத்தின் தனிச்சிறப்புக்குரியதெனலாம். மயூரன், கோபி, வஜ்ரா, வைசா ஆகியோரின் குறிப்புகள் இவற்றுள்ளே அடங்குகிறன. தன்னிலே வெளியாகும் படைப்புகளிலே இவ்வகையான கூறுகளுக்கு ஊக்கத்தினை அளிக்கப் பூங்கா ஆர்வம் கொள்கிறது. இந்த வாரத்துப்பூங்காவிலும் தமிழ்மணத்திலே திரட்டப்பட்ட படைப்புகளோடு, பூங்காவுக்கென்றே தனியாக பத்மா அர்விந்தால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகும் "பதின்மவயதினரின் போதைப்பொருள் அடிமைத்தனமும் சில தீர்வுகளும்" இணைந்துகொள்கிறது. பூங்கா வெளிவரத் தொடங்கியபோது குறிப்பிட்டபடி, இனி வரும் பூங்கா இதழ்கள், இதுபோன்ற தனிப்பட்ட சிறப்புக்கட்டுரைகளும் செவ்விகளும் பல்வேறு துறைகளிலும் உள்ளடங்கி வெளிவரும். இது பூங்கா வலைஞ்சிகையைத் தமிழ்மணம் திரட்டி சார்ந்த ஒரு தொகுப்பு இதழ் என்பதற்கும் அப்பால், ஒரு முழுமையான இதழாகப் பரிணமிக்கச்செய்யும்.


தமிழ் அரசியல் குறித்து சபேசன், திராவிடத்தமிழர்கள், குழலி, அருண்மொழி ஆகியோரின் கட்டுரைகள் பேசுகின்றன. தமிழின் நலன் குறித்த அரசியலைச் செய்கின்றோமென்று சொல்கின்ற அரசியல்வாதிகளின்மீது தமிழின் நலத்தின் பெயரினிலே கேள்விகளையும் மறுப்புகளையும் சபேசனும் அருண்மொழியும் முன்வைக்கின்றனர். இவர்களது கட்டுரைகள், தொடர்விவாதங்களுக்குரியன. மரணதண்டனை குறித்த ஆழமான, தமைத்தாங்கும் ஆதாரங்களுடனான பண்புநிறை பேச்சுமொழியிலமைந்த தொடர்விவாதக்கட்டுரைகளை எதிர்பார்ப்பதுபோலவே, இக்கட்டுரைகள்மேலும் பூங்கா வரும் வாரங்களிலே பதிவர்களிடமிருந்து எதிர்பார்க்கின்றது.

உமா கதிரினது தெருக்கூத்துமீதான ஞாபகம், பழைய பயில்கலைகளைத் தானும் மீட்டுப்பார்த்து வாசகர்களுக்கும் ஞாபகத்துக்குக் கொணரும் ஒரு நல்ல தொடக்கம். தமிழ்நிலத்திலே முளையிட்டுத் தொடங்கியும் நாற்றாகப் புகுந்தும் அழிந்து போகும் பழங்கலைகளைப் பேணலும் பதிவு செய்தலும் அண்மைக்காலத்திலே பதிப்பேடுகளிலே வரவேற்புப் பெறுகின்றன. இதுபோன்று, இணையத்தமிழ்வலையத்திலும் தொடர்ச்சியான பதிவுகள் வந்து மின்னூலென அவ்வப்போது தொகுக்கப்படவேண்டும். இப்படியான மின்னூலாக்கம், பிறமொழியின் சிறந்த அசைபடங்களின்மீதான - இவ்வாரப்பூங்காவிலே வெளியாகும் நந்தனின் 'One flew over the cuckoo's nest' மேலானது போன்ற- கருத்துப்பார்வைகளுக்கும் பொருந்தும்.

மேலும், இவ்வாரப்பூங்காவிலே சமாதானத்துக்கான நோபல்பரிசாளர் மீதான பத்ரியின் கட்டுரை, ஜான்பாபுராஜின் அசைபடப் பார்வை, தமிழ்நதியின் கவிதை, மா. சிவகுமாரின் தொழில்வாழ்க்கை மீதான பார்வை ஆகியனவும் இடம்பெறுகின்றன.

http://poongaa.com/component/option,com_magazine/Itemid,1/

http://poongaa.com/content/view/409/1/

Sonntag, September 10, 2006

யேர்மனியில் - சாவிலும் வாழ்வோம்

வெள்ளி 25-08-2006 17:33 மணி தமிழீழம் [பதிவு நிருபர்]

யேர்மனியில் எழுச்சியுடன் 5வது நாட்களாக சாவிலும் வாழ்வோம் போராட்டம் முன்னெடுப்பு.

யேர்மனியில் இன்று 5வது நாட்களாக சாவிலும் வாழ்வோம் கவனயீர்ப்பு போராட்டம் ஸ்பயா மாநிலத்தில் உள்ள மன்கைம் நகரில் முன்னெடுக்கப்பட்டது.



தமிழீழ தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பித்த இந் நிகழ்வில் தமிழீழ தேசியக் கொடியை தமிழர் ஓருங்கிணைப்புக்குழுவின் குறுன்ஸ்ரட் பிரதிநிதி சுவேந்திரன் ஏற்றிவைத்தார்.



அதனை தொடர்ந்து பொது சுடர்களை 3 மாவீரர்களின் தாயார் திருமதி சிவா தியாகராஜா,தென்மேற்கு மாநிலத்தின் தமிழ்கல்விகழக பொறுப்பாளர் திரு.சிவகுமார், தமிழர் ஓருங்கிணைப்புக்குழுவின் கைடல்பேக் பிரதிநிதி ஞானகிருஸ்ணன் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.




100க்கு மேற்பட்ட தமிழீழ மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் யேர்மனிய மக்களிற்கு ஈழத்தமிழர் பிரச்சினைகளை விளக்கும் விதத்தில் ஸ்பையர் மாநில கலைபண்பாட்டு கழகத்தினரால் டொட்மொழியில் பாடல் தயாரிக்கப்பட்டு யேர்மனிய மக்கள் மத்தியில் இசைக்கப்பட்டது.




இந் நிகழ்வு நடைபெற்ற போது பெரும் எண்ணிக்கையில் யேர்மனிய மக்கள் நின்று அவதானித்தனர்.அத்துடன் துண்டுப்பிரசுரங்களும் யேர்மனிய மக்களிற்கு விநியோகிக்கப்பட்டதுடன் எமது பாரம்பரிய நடனங்கள், தெருக்கூத்துக்கள் என்பன நிகழ்த்தப்பட்டன.




நாளைய தினம் பிராங்போட் நகரில் காலை 9மணிமுதல் மாலை 5மணி வரை சாவிலும் வாழ்வோம் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Quelle - Pathivu

Donnerstag, Juni 01, 2006

சிலந்திவலை

வலைப்பதிவுலக மலரும் நினைவுகள் (2003 முதல் இன்று வரை)

Venkataramani
Saturday, May 20, 2006


ஆச்சரியமா இருக்கு. எனக்கும் தமிழ் வலைப்பதிவுகளுக்கும் கிட்டத்தட்ட 3 ஆண்டுகால தொடர்பு இருந்திருக்கு. செப்டம்பர் 2003ல முதல் பதிவு போட்ட நான் எப்பவாவது ஒரு ரெண்டு பதிவு மட்டுமே போட்டிருந்தாலும், தமிழ் வலைப்பதிவுலகத்துல நடக்கறதையெல்லாம் கவனச்சுக்கிட்டு வந்திருக்கேன். ஆரம்பத்துல பத்து இருபது பேர் எழுதிக்கிட்டு இருந்ததுபோய் இன்னைக்கு தேதியில தமிழ்மணத்துல 800க்கும் மேற்பட்ட பதிவுகள் இருக்கு. அதுல சிலர் நிறைய பதிவுகள் வெச்சிருந்தாலும், என்னோட மென்பொருளின் கணக்குப்படி 500க்கும் மேற்பட்ட தனிநபர்கள் நிச்சயம் இருக்கிறார்கள். கடந்த ஒரு வருடத்துக்குள்ள பதிய ஆரம்பிச்சவர்களுக்கு ஆரம்பகால நிகழ்வுகளை பத்தி தெரியாததுனால, என்னோட நினைவுகளை கிளறி சில சுவாரசியமான விஷயங்களை பத்தி எழுதலாம்னு தோணிச்சு.

முதல்ல தமிழ்ல வலைப்பதிய ஆரம்பிச்சவங்க யூனிகோட் பயன்படுத்தலை. TSCIIங்கற வேற என்கோடிங் உபயோகிச்சதால அவங்களோட பதிவை உலாவில சுலபமா படிக்கமுடியாம இருந்தது. அதனால நாங்க அதுக்காக ஒரு fontஐ நிறுவி படிக்கவேண்டியிருந்தது. அப்புறமாதான் யூனிகோட்ல பதிஞ்சா விண்டோஸ் 2000லயோ XPலயோ சுலபமா படிக்கலாம்னு கண்டுபிடிச்சாங்க. இதுக்கப்புறம்தான் நான் என் பதிவை ஆரம்பிச்சேன். அப்போதெல்லாம் வலைப்பதிவோட யூ. ஆர். எல் தெரிஞ்சாதான் போய் படிக்கமுடியும். யாராவது புது இடுகை போட்டாலும் தெரியாது. அதனால ஒவ்வொரு பதிவா போய் எதாவது புதுசா இருக்கான்னு பாக்கறது. அப்படியே நாம எதாவது புதுசா எழுதியிருந்தா அதுக்கு விளம்பரம் பண்ணிட்டு வரனும். ஒருத்தர் ரெண்டு பேராவது நம்மளோடதை படிக்கனுமே!

மொதல்ல எல்லாரும் சுவாரசியமா விவாதிச்ச விஷயம் என்ன தெரியுமா. blogங்கற ஆங்கில வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை என்னனுதான். வலைப்பூ-னாரு மாலன் கவித்துவமா. வலைப்பதிவு, வலைக்குறிப்பு இப்படில்லாம் நிறைய பேரு வெச்சாங்க. கருத்துக்கணிப்பெல்லாம் வெச்சி வலைப்பதிவுனு முடிவு செஞ்சாங்கன்னு நினைக்கறேன்.

மதி கந்தசாமி அவர்களுடைய முயற்சியால் Tamil Bloggers List என்ற இந்த பக்கம் ஆரம்பிக்கப்பட்டது. புதுசா பதிய வர்றவங்க இந்த பக்கத்துல அவங்க பதிவை அறிவிச்சா அது லிஸ்ட்ல சேர்த்துக்கப்படும். இதுவே எங்களுக்கு பெரிய வரப்பிரசாதமா இருந்துது. அப்புறம் வலைப்பூ சஞ்சிகை ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு வாரமும் ஒரு ஆசிரியர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் வலைப்பதிவுலகுல யார் யார் என்னென்ன சுவாரசியமா எழுதியிருக்காங்கன்னு சேகரிச்சு அதைப்பற்றிய விமர்சனத்தோட எல்லாருக்கும் அறிவிப்பார். இதில் ஆறாவது ஆசிரியராக காசி அவர்களுக்கு அடுத்து என்னை நியமித்தார் மதி. நான் வலைப்பூக்களில் நகைச்சுவை/பொழுதுபோக்கு, அறிவியல்/தொழில்நுட்பம் போன்ற சில தலைப்புகளில் எழுதியதை
இங்கே பார்க்கலாம்.
இந்த சஞ்சிகையின் archives படிச்சா அந்தகால (!) வலைப்பதிவுகளைப்பத்தி தெரிஞ்சுக்கலாம். அப்புறம் காசி அவர்கள் தமிழ்மணங்கற அற்புதமான வலைவாசலை அறிவிச்சாரு. அதுல இருந்து வலைப்பதிவுகளோட பொற்காலம் ஆரம்பமாச்சு.

மொதமொதல்ல சொந்தப்பெயர் இல்லாம வலைப்பதிவு ஆரம்பிச்சவர் முகமூடி தான்னு நினைக்கறேன். 'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால முகமூடி போட்டதா அவரோட பதிவின் தலைப்பு சொல்லுது. அடுத்து கண்டிப்பா சொல்லப்படவேண்டியவர் பெயரிலி. இவரோட தமிழ்ப்புலமையைப்பாத்து ஆச்சரியப்படற அதே சமயத்துல இவரோட நீளமான குழப்பறமாதிரியான வாக்கியங்கள பாத்து பயந்துட்டாங்க எல்லாரும். இவரோட அந்தகால பதிவு TSCIIல இருக்கறதால அதுக்குப்பதிலா இந்த யூனிகோட் பதிவை படியுங்க. உதாரணத்துக்கு அதுல இருந்து ஒரு வாக்கியம்... ஆமாங்க சத்தியமா ஒரே வாக்கியம்தான் இவ்ளோ நீளம்.

"இன்னொருவர் பெயரிலே பொய்யாக எழுதுகிறவர், முன்னையவர் பெயருக்குக் கெடுதல் விளைவிப்பதாக இருந்தால், அவரின் கருத்தின் தொனியிலே நிதானமின்மையும் ஆத்திரமேம்படுதலும் அதிக சந்தர்ப்பங்களிலே எண்ணிக்கையிலே அதிகமான பின்னூட்டங்கள் இல்லாமலும், அப்படி இருக்கும்பட்சத்திலே இருப்பின், அவற்றிலே சொன்னதையே சுட்டிக்கொண்டிருக்கும் கிளிப்பிள்ளைத்தனமோ அல்லது முன்னைப்பின்னைக்குத் தொடர்ச்சியின்மையோ இன்றி குறிப்பிட்ட பதிவுக்கான முழங்காலின் தட்டுப்படுதலுக்கு மூளை, முண்ணாண் துடிப்பான பின்னூட்டங்களாகவே இருக்கும்."

இவர் ஒரு சென்சேஷனா இருந்தார் கொஞ்ச காலத்துக்கு. மொதல்ல சிங்கப்பூர்ல இருந்து ஒரு குழந்தைக்குத்தாய்னாரு தன்னைப்பத்தி. அப்புறம் இவர் ஆண்தான்னு கண்டுபிடிச்சாங்க. அடுத்து, மூத்த வலைப்பதிவாளர் சந்திரவதனா அவர்கள். நாமெல்லாம் ஒரு பதிவ வெச்சுக்கிட்டு அதுல எழுதறதுக்கே கஷ்டப்படும்போது இவர் இருபதுக்குமேல பதிவுகள் வெச்சிருக்கார். அவரோட ப்ரொபைல பாத்தீங்கன்னா ஒரு பெரீய்ய்ய லிஸ்ட்டே இருக்கு. (இப்போ குமரன் அவங்களுக்கு போட்டியா வராப்போல தெரியுது).

2004ல் பா.ராகவன், எஸ்.ராமகிருஷ்ணன், மாலன் போன்ற சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் வலைப்பதிய வந்தாங்க. ஆனா, அவர்களுக்கு வலைப்பதிவுகளை பற்றி ஒரு தவறான கண்ணோட்டம் இருந்தது. பதிவுகளை வலை எழுத்தாளர்கள் அவங்க படைப்புகளை வெளியிடமட்டும் உபயோகிப்பாங்கன்ற கண்ணோட்டத்துல, என்னையும் உங்களையும் போன்ற சாதாரண மனிதர்கள் எழுதறது அவங்களுக்கு பிடிக்கல. பாரா வலைப்பதிவர்களுக்கு போட்ட பத்து கட்டளைகள் ரொம்ப நாளைக்கு பேசப்பட்டது. பாராவின் பதிவை இப்போ எடுத்துட்டாங்க போலிருக்கு. அதனால அவரோட கட்டளைகளை உங்களுக்கு காட்டமுடியல. ஆனா, எஸ்.ராமகிருஷ்ணனோட கருத்துகள் இங்கே இருக்கு. இப்போ இவங்க எல்லாம் வலைப்பதியரதில்லை போலிருக்கு. என்னைப்பொறுத்தவரை வலைப்பதிவுங்கறது எழுத்தாளர்களுக்கு மட்டுமில்ல. அவங்களுக்கு நிறைய வலை சஞ்சிகைகள் இருக்கு. யார் வேண்டுமானாலும் தன் கருத்துகளை டைரி மாதிரி பதிக்கறதுக்குதான் வலைப்பதிவு.

2005ல நடந்த எல்லாருக்கும் தெரிஞ்ச சில விஷயங்கள பத்தி பேச விரும்பாததால இத்தோட முடிச்சுக்கறேன். சரி, கடைசியா பாஸ்டன் பாலாஜியோட இந்த சுவாரசியமான பத்து கட்டளைகளை படிச்சுட்டுப்போங்க.

Venkataramani
Saturday, May 20, 2006
http://silandhivalai.blogspot.com/2006/05/2003.html

Freitag, Februar 17, 2006

அவுஸ்திரேலியாவில் எழுத்தாளர் விழா

அவுஸ்திரேலியாவில் தமிழ் போதனாமொழி - மூத்த - இளம் தலைமுறையினர் சங்கமித்த எழுத்தாளர் விழா - உயிர்ப்பு நூல் வெளியீடு

ரஸஞானி

புலம் பெயர்ந்த தமிழர்கள் தம்முடன் தமது இயல்புகளையும் அழைத்துச் சென்றிருந்த போதிலும் இவர்கள் மத்தியில் கலை , இலக்கிய உணர்வுள்ளவர்கள் - அந்த இயல்புகளுக்கும் அப்பால் அடுத்த தலைமுறையின் தேவை கருதி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழின அடையாளம் பேணப்படவேண்டும் என்ற கருத்தியலுக்கு வலுச்சேர்க்கும் பணிகள் ஒருபுறம் மேற்கொள்ளப்படும் அதே சமயம் - புகலிட இலக்கியத்தை ஆரோக்கியமான திசையில் வளர்த்தெடுக்க வேண்டும் என்ற பிரயத்தனமும் நீட்சி பெற்றுள்ளது.

கடந்த ஜனவரி 7 ஆம் 8 ஆம் திகதிகளில் அவுஸ்திரேலியா மெல்பேர்ணில் நடந்த ஆறாவது எழுத்தாளர் விழாவின் நிகழ்ச்சிகள் - விழா அமைப்பாளர்களின் நோக்கத்தை படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டிருக்கும் அறிகுறியை காண்பிக்கிறது.

“அறிந்ததைப் பகிர்தல், அறியாததை அறிந்து கொள்ள முயல்தல்” என்ற சிந்தனையை முன்னிறுத்தி 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த எழுத்தாளர் விழா , பின்பு ஆண்டுதோறும் மாநிலங்களில் நடைபெற்றது.

இம்முறை ஆறாவது எழுத்தாளர் விழா மெல்பேர்ண் பிறெஸ்ரன் (Preston Town Hall , Melbourne) நகர மண்டபத்திலும் , பண்டூரா(Bundoora Park) பூங்காவிலும் இரண்டு நாட்கள் நடைபெற்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளிலும் (2001 முதல் 2005 வரையில் ) எழுத்தாளர்
லெ.முருகபூபதி இவ்விழாக்களின் பிரதம அமைப்பாளராக செயல்பட்டார்.

இம்முறை (ATLAS) என்று அழைக்கப்படும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் (Australian Tamil Literary & Arts Society) என்ற அமைப்பு இவ்விழாவை ஒழுங்கு செய்திருந்தது.

அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர்கள் , கவிஞர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் வருடாந்தம் ஒன்றுகூடும் இவ்விழாவில் இம்முறை கருத்தரங்கு, நூல் விமர்சன அரங்கு, நூல் வெளியீடு, குறும் திரைப்பட அரங்கு, கவியரங்கு என 5 நிகழ்வுகள் இடம் பெற்றன.

சமூகம் . கல்வி , இலக்கியம் முதலான தலைப்புகளில் கருத்தரங்கு அமர்வுகள் முதல்நாள் விழாவில் காலை முதல் மாலை வரை நடைபெற்றன.

விழாவை ஒழுங்கு செய்த அமைப்பின் கீதத்தை மெல்பேர்ண் கவின்கலைக் இசைக்கல்லூரி மாணவர்கள் அழகாக பாடியதைத் தொடர்ந்து, திருமதி.உஷாகௌரி சந்திரனின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.

‘ நல்லைக்குமரன்’ கந்ததையா குமாரசாமி தொடக்கவுரையை நிகழ்த்தினார்.

“சமூகம்” என்ற தலைப்பில் திருமதி. உஷா சிவநாதன் தலைமையில் நடந்த கருத்தரங்கில், கலாநிதி சந்திரலேகா வாமதேவா , “ அவுஸ்திரேலியாவிற்கு புலம் பெயர்ந்துள்ள தமிழ்ச் சமூகத்தில் இனக் கலப்பு அதிகரிக்குமா ?” என்ற தலைப்பில் உரையாற்றுகையில், “ இனங்களுக்கிடையே கலப்புத் திருமணங்கள் நடப்பதொன்றும் இலங்கைத் தமிழராகிய நமக்குப் புதுமையான விஷயமல்ல. புற இனங்களுடனான கலப்பு என்பது புலம் பெயர்ந்த நாடுகளில் நடப்பதைப்போல சொந்த நாடுகளில் இடம்பெற வாய்ப்புகள் மிகமிக குறைவாயினும் உள்நாட்டிலே வாழ்கின்ற இனங்கள் கலப்பது என்பது பொதுவாக நடைபெறுகிறது. அரசியல் பிரச்சினைகளாலும் அதனால் ஏற்பட்ட போராலும் எமது நாட்டில் வாழும் தமிழ் சிங்கள இனங்களிடையே கசப்புணர்வு இருந்த போதும் முன்னரைப் போலல்லாவிடினும் ஆங்காங்கே கலப்புத் திருமணங்கள் நடைபெற்றே வருகின்றன” என்றார்.

“தமிழ்ச் சமூகத்தில் பெண்கள்” என்ற தலைப்பில் உரையாற்றிய திருமதி. பாமதி பிரதீப், “ புலம் பெயர்ந்து வாழும் எமது சகோதரர்கள் எதிர்பார்க்கும் முக்கிய தகைமை , பெண் அழகாக இருக்க வேண்டும். இவர்கள் சொல்லும் அழகு வெள்ளைத் தோலுடன் மெலிந்த தோற்றத்துடன் ஏறத்தாள சிம்ரன் , ஜோதிக்கா, ரம்பா , சினேகா போன்ற தோற்றமுடைய பெண்களை மனதில் வைத்து தேடுகிறார்கள். அழகான பெண்ணை வாழக்கைத்துணையாகப் பெறுவது தமது கனவு, இலட்சியம் என்று நினைக்கின்றார்கள்” என்றார்.

இலங்கையிலிருந்து வருகை தந்து உரையாற்றிய திருமதி. ஞானம் ஞானசேகரன், “ இலங்கையில் பெண்ணியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் தமது உரையில் , “ இலங்கையில் பெண்ணியம் தொடர்பான முயற்சிகள் , பெண்கள் குறித்த ஆரம்ப நிபைபாடுகளிலிருந்து பெரிதும் வேறுபட்டு பெண் விடுதலை குறித்த சிந்தனா விழிப்புணர்வும் பெண்களின் முன்னேற்றம் குறித்த வழிமுறைகளை உள்ளடக்கியும் காணப்படுகிறது” என்றார்.

மெல்பேர்ண் பாரதி பள்ளியின் அதிபரும் எழுத்தாளருமான திருமதி.புவனா இராஜரட்னத்தின் தலைமையில் நடந்த

‘ கல்வி’ என்ற தலைப்பு கருத்தரங்கில் சிட்னியிலிருந்து வருகை தந்த திரு. தி. திருநந்தகுமார், “தொடர்பாடல் அணுகுமுறையில் தமிழ்மொழி கற்பித்தல் - சில சிந்தனைகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அவர் தமது உரையில், “ இரண்டாம் மொழி கற்பித்தலில் பல்வேறு கற்பித்தல் முறைகளும் உத்திகளும் காலத்திற்குக் காலம் அறிமுகப்படுத்தப்பட்டு வந்துள்ளன. இலங்கையில் ஆங்கில மொழி கற்பித்தலில் இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்ட கற்பித்தல் முறை , மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்ட கற்பித்தல் முறை என்பதைத் தொடர்ந்து தற்போது தொடர்பாடல் அணுகுமுறையிலான கற்பித்தல் முறை தொடர்கிறது. இங்கும் ( அவுஸ்திரேலியாவில் ) அத்தகைய கல்வி முறையே கடைப்பிடிக்கப் படுகின்றது” என்றார்.

பல்லின கலாச்சார நாடாக விளங்கும் அவுஸ்திரேலியாவில் பல்கலைக்கழக பிரவேசப் பரீட்சையில் தமிழ்மொழியும் ஒரு பாடமாக இருப்பதனால் இந்நாட்டில் பல தமிழ்ப் பாடசாலைகள் இயங்குகின்றன. பல தமிழ் மாணவர்கள் தமிழைப் பயின்று தோற்றுகின்றனர்.

குறிப்பிட்ட இளம் தலைமுறையைச் சேர்ந்த மாணவர்களும் இம்முறை எழுத்தாளர் விழாக் கருத்தரங்கில் பங்கேற்றனர். “விக்ரோறியாவில் தமிழ்க் கல்வி - எனது அநுபவங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றிய செல்வன் பிரசன்னா குமாரதாசன் தமதுரையில், “சிறு வயதில் நான் பெற்ற தமிழறிவை மழுங்கவிடாது வளர்த்தெடுக்க வேண்டும் என்ற முனைப்பபைக் கொண்டிருந்த எனது பெற்றோர் , வார இறுதி தமிழ்ப் பாடசாலையொன்றில் என்னை இணைத்தனர். அத்தோடு நின்றுவிடாது வீட்டில் முழுமையாகத் தமிழிலேயே உரையாடவேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் நடைமுறைப் படுத்தினர். வாரம் ஒருநாள் தமிழ்க் கல்வி போதுமானதாக இருக்காது என்ற எண்ணத்தில் தமிழ் நூல்களையும் சஞ்சிகைகளையும் எனக்கு வாசிக்க வாய்ப்பளித்தனர்” என்றார்.

செல்வி அபிராமி ஜெயக்குமார் அவுஸ்திரேலியா நாட்டுக்கு புலம்பெயர்ந்து வந்த பொழுது மூன்று மாதக் குழந்தை. இங்கு வந்து தமிழ்ச் சூழலில் வளர்ந்து தமிழைப் பயின்று பரீட்சையில் தமிழையும் ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்துத் தோற்றினார். இன்று யுவதியாக வளர்ந்துள்ள இவர் இக்கருத்தரங்கில் சமர்ப்பித்துள்ள கட்டுரையில் ,

“ இந்தப் பெரிய கண்டத்தில் தமிழர்களும் குடியேறிய பின்பு தமிழ் இசை, பரதம், வாய்ப்பாட்டு அரங்கேற்றங்கள் மட்டுமல்லாமல் தமிழ் அமைப்புகள் , தமிழ்ப் பாடசாலைகள், தமிழ் வானொலிகள், தமிழ் தொலைக்காட்சிகள், தமிழ்ப் பத்திரிகைகள், தமிழ்ச் சஞ்சிகைகள், தமிழ்நூல் வெளியீடுகள், தமிழ் விழாக்கள் உட்பட பல தமிழ் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்படியெல்லாம் மாற்றங்கள், முன்னேற்றங்கள் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்புடன் இங்கே எவரும் குடியேறியிருக்க மாட்டார்கள் என்றே நான் நம்புகின்றேன்” எனத் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா போன்ற தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாட்டில் எதிர்காலத் தலைமுறையிடம் தமிழ் இருக்குமா என்ற சந்தேகம் காலம் காலமாகக் கேட்கப்படுகின்றது.

இந்தக் கருத்தரங்கிற்கு கட்டுரை சமர்ப்பித்த திரு. குலம் சண்முகம் தமது ஆக்கத்தில் இச்சந்தேகத்தையும் துல்லியமாகச் சுட்டிக்காட்டியிருந்தார்.

அவரின் கருத்து பின்வருமாறு:

“ தாயகத்திற்கு வெளியே வாழ்கின்ற தமிழர்கட்கு தமிழ் ஒரு மரபு மொழி. அவர்களது பண்பாட்டின் - பாரம்பரியத்தின் பிரிக்கமுடியாத ஒரு கூறு. இது இரண்டாம் மொழியோ அல்லது அன்னிய மொழியோ அல்ல. இதனால் இவற்றைக் கற்பிக்கின்ற முறைகளைப் பிரயோகித்து தமிழர்கட்கு தமிழைக் கற்பிக்க முனைவது பொருத்தமற்றதாக அமையலாம். அந்த முறைகளை அப்படியே பிரதிபண்ண முயல்கின்றபோது விரும்பத்தக்க பலனை மாணவர்கள் அடைய முடியாது. இதனால்தான் தற்போது தமிழ் கற்பிக்கப்படும் முறைகளிலே பலரும் பல குறைபாடுகளைக் காண்கின்றனர். இது சரிப்பட்டு வராது வீண் முயற்சி என்று பலரும் தமிழ்க்கல்வியை கைகழுவி விட நினைக்கின்றனர்.”

இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த ஞானம் சஞ்சிகையின் ஆசிரியர் டொக்டர் தி. ஞானசேகரனின் தலைமையில் நடந்த ‘இலக்கியம்’ என்ற தலைப்பிலான மூன்றாவது அமர்வு கருத்தரங்கில் ,

“ கர்நாடக சங்கீதமா? தமிழ் இசையா?” என்ற தலைப்பில் செந்தமிழ்ச் செல்வர் சு.ஸ்ரீகந்தராசா உரையாற்றுகையில், “ தமிழிசை பற்றிக் கூறுகின்ற நூல்களில், இன்று கிடைக்கப் பெறுகின்ற மிகத் தொன்மையான நூல் தொல்காப்பியம் ஆகும். அந்நூல் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னால் தொல்காப்பியரால் எழுதப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். இசையைத் தொழிலாகக் கொண்ட மக்கள் உபயோகப்படுத்தும் இசைக்கருவிக்குப் பறை என்றும், இன்பமாகப் பொழுதுபோக்கும் மக்கள் பயன்படுத்தும் இசைக்கருவிகளைப் பற்றிக் குறிப்பிடும் தொல்காப்பியர் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களுக்கும் உரிய தொழில் இசையையும் , இன்ப இசையையும் தெளிவாக வகுத்து வைத்துள்ளார்” எனத் தெரிவித்தார்.

“ புகலிட இலக்கியத்தின் எதிர்காலம்” என்ற தலைப்பில் உரையாற்றிய திரு. லெ. முருகபூபதி, தெரிவித்ததாவது:

“ 1980 ஆண்டின் பின்பு இலங்கையிலிருந்து தமிழர்கள் பரவலாக ஐரோப்பிய நாடுகளுக்கும் , அமெரிக்கா , கனடா , அவுஸ்திரேலியா முதலான நாடுகளுக்கும் புலம்பெயர்ந்த பின்பு இவர்கள் மத்தியில் இருந்த உள்ளார்ந்த கலை இலக்கிய ஆற்றல் மிக்கவர்களின் படைப்பு முயற்சிகள் இதழ்கள் , பத்திரிகைகள், வெகுசன ஊடக சாதனங்கள், இணையத்தளங்கள் முதலானவற்றில் பதிவானதையடுத்து ‘புலம்பெயர்ந்தோர் இலக்கியம்’ பேசுபொருளாகியது. புலம் பெயர்ந்தோர் இலக்கியத்தை ‘புலம்பல் இலக்கியம்’ என்று கேலி பேசிய சிந்தனையாளர்களையும் நன்கு அறிவோம். இடப் பெயர்வம், புலப் பெயர்வும் தமிழருக்கு மாத்திரம் நேர்ந்ததல்ல. பல நாடுகளிலும் யுத்தம் காரணமாக சிதறுண்டு போன குடும்பங்கள் கோடிக்கணக்கானவை.”

நூல் விமர்சன அரங்கு

விழாவின் மாலை நிகழ்ச்சியில் , நாவல் ,சிறுகதை , கவிதை , சிறுவர் இலக்கியம் , மொழிபெயர்ப்பு , நேர்காணல் , சஞ்சிகை முதலான தலைப்புகளில் நூல் சஞ்சிகை விமர்சன அரங்கு எழுத்தாளரும் மெல்பேர்ண் ஈழத் தமிழ்ச் சங்கத் தலைவருமான திரு.தெ.நித்தியகீர்த்தி தலைமையில் நடந்தது.

கடந்த ஆண்டு இலங்கையில் சாகித்திய விருதினைப் பெற்ற தாமரைச் செல்வியின் ‘ பச்சை வயல் கனவு’ நாவலை திரு.எட்வர்ட் பிலிப் மரியதாசன் விமர்சித்தார். ‘தி.ஞானசேகரன் கதைகள்’ நூலை , திரு.கே.எஸ்.சுதாகரும், புதுவை இரத்தினதுரையின் ‘ பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்’ கவிதை நூலை ஆவூரானும், பத்மா சோமகாந்தன் எழுதிய ‘Stories from u;indu` Mythology’ என்ற சிறுவர் இலக்கிய நூலை திருமதி.ரேணுகா தனஸ்கந்தாவும் , ஜோர்ஜ் ஓர்வெல் எழுதிய ‘Animal Farm’ என்ற ஆங்கில் நாவலின் மொழிபெயர்ப்பான (மொழி பெயர்த்தவர் : ‘நல்லைக்குமரன்’ கந்தையா குமாரசாமி) ‘விலங்குப் பண்ணை’ நூலை திரு.தென்னை கணேசனும் , பேராசிரியர் கா. சிவத்தம்பியின் ‘இலக்கியமும் வாழ்க்கையும்’ நேர்காணல் நூலை திரு.செ.சிவசம்புவும், ‘ஞானம்’ சஞ்சிகை குறித்து திருமதி.கனகமணி அம்பலவாணர்பிள்ளையும் விமர்சித்தனர்.

உயிர்ப்பு வெளியீடு

அவுஸ்திரேலியாவில் முன்பு வசித்த, தற்போது வசிக்கும் இருபது எழுத்தாளர்களின் சிறுகதைகளைக் கொண்ட ‘உயிர்ப்பு’ என்ற தொகுப்பு நூலின் வெளியீட்டு விழா இரவு நிகழ்ச்சியின்போது திரு.விமல் அரவிந்தன் தலைமையில் நடந்தது.

ஜேர்மனியிலிருந்து வருகை தந்திருந்த எழுத்தாளர் திருமதி. சந்திரவதனா செல்வகுமாரன், திரு.கந்தையா குமாரதாசன் ஆகியோர் நூலின் ஆய்வுரையையும், நூலின் தொகுப்பாசிரியர் லெ. முருகபூபதி வெளியீட்டுரையையும் நிகழ்த்தினர். பல கலை, இலக்கிய ஆர்வலர்கள் நூலின் சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.

முதல் நாள் விழாவின் இறுதி நிகழ்ச்சியாக, காவலூர் இராசதுரையின் தொகுப்புரையுடன் நான்கு குறும் திரைப்படங்கள் காணபிக்கப் பட்டன. திருமதி.ரமா சிவராஜாவின் நன்றியுரையுடன் முதல் நாள் நிகழ்ச்சிகள் இனிதே நிறைவெய்தின.

கவியரங்கு

இரண்டாம் நாள் மெல்பேர்ண் பண்டூரா பூங்காவில் ‘இங்கிருந்து எங்கே’ என்ற தலைப்பில் ‘பாடும் மீன்’ சு. ஸ்ரீகந்தராசா தலைமையில் காலை 11.00 மணிமுதல் நடந்த கவியரங்கில், திருமதிகள்: மனோ ஜெகேந்திரன், சௌந்தரி சிவானந்தன், யசோதா அமலதாசன், சாந்தினி புவனேந்திரராசா, கனகமணி அம்பலவாணர்பிள்ளை, திருவாளர்கள்: தங்கையன் வெள்ளையன், ஆவூரான் ஆகியோர் பங்குபற்றினர்.

ஒடியல்கூழ் விருந்துடனான கலந்துரையாடலின் பின்பாக எழுத்தாளர் விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் மாலை 2.00 மணியளவில் நிறைவெய்தின.

nallaikumaran2002@yahoo.com.au (மூலம் பெறப்பட்டது)

Quelle - http://www.thinnai.com/ar0217063.html