Sonntag, September 14, 2003

எழுதி விடத்தான் ஆசை

எதுவுமே எழுதாததால்,
எழுத எதுவுமே இல்லையென்று அர்த்தம் கொண்டு விட முடியாது.
மனசின் ஓசைகள் எல்லாவற்றையும் எழுதி விடத்தான் ஆசை.
பாசைகள்தான் கிடைக்க மறுக்கின்றன.

Dienstag, September 02, 2003

டயறி

எழுதிப் படிக்காதவன் வாழ்க்கை கழுதையின் என்னத்துக்கோ சமனாம். அப்பாதான் சொல்லுவார்.
சொல்லுறதோடை மட்டும் நின்று விடாமல் வருசம் பிறக்கிறதுக்கு சில நாட்கள் முன்பாக ஒவ்வொரு வருசமும் ஒரு டயறி வேண்டிக் கொண்டு வந்து தருவார். ஒவ்வொரு நாளும் இரவில் அன்றைய பகல் நடந்த விடயங்களை எழுதச் சொல்லுவார். நானும் எழுதுவேன்