நாம் எத்தனையோ விடயங்களுக்காகக் கலங்குகிறோம். கண்ணீர் வடிக்கிறோம். ஆனால் வழமை போலப் பேச்சாகவோ, வெறும் செய்தியாகவோ இல்லாது மரணம் என்ற ஒன்று நியமாகவே எம் வாழ்வில் குறுக்கிடும் போதுதான் நாம் இத்தனை காலமும் அர்த்தமின்றி அநாவசியத்துக்குக் கண்ணீர் வடித்தோம் என்பதைப் புர்ந்து கொள்கிறோம். வார்த்தைகளில் வடிக்க முடியாத அந்த வலியில் துவண்டு போகிறோம்.
அதி உச்ச மனவலியைத் தரக் கூடிய வலிமை இந்த மரணம் என்ற கொடிய நிகழ்வுக்கு உண்டு. இந்தத் திணறல்கள் கதையும் அப்படியான ஒரு உச்ச வலியைச் சொல்ல முனைகிறது. சொல்லாது விட்ட, செய்யாது விட்ட விடயங்களை பிய உறவொன்றின் மரணத்தின் பின் நினைந்து நினைந்து ஆதங்கப்படும் மனதின் ரணத்தை - அன்று இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாம். நான் தப்புச் செய்து விட்டேன்.. என்பது போன்றதான ஒரு சில வாகள் எடுத்துக் காட்டுகின்றன. வாசிக்கத் தொடங்கிய பின் நிறுத்த மனமில்லாது கதையோடு மனசு ஓடுகிறது. என்ன நடந்து விட்டது? இறந்து விட்டாளா..? இறந்து விட்டாளா என முடிவை அறிய மனசு அவசரப் படுகிறது. இருந்தாலும் அவசரப் படாது எழுத்தோடு பயணித்து முடியுந் தறுவாயில் அது ஒரு உண்மைக் கதை என்பது தொந்த போது மிகவும் சங்கடமாகி விட்டது.
சந்திரவதனா
யேர்மனி
Quelle - http://www.thisaigal.com/sep03/uniletters.html