Montag, März 29, 2004

பிரபு ராஜதுரை-March 28, 2004

விதி தன்னை படைக்கட்டும்!

வணக்கம்,

தொண்ணூறுகளின் இறுதியிலும் பின்னரும் இந்தியாவில் மென்பொருள் தொழில் அசுர வளர்ச்சியடைந்ததற்கு காரணம், 'மென்பொருள் தொழில் வளர்ச்சிக்கென நம் அரசிடம் ஒரு அமைச்சகம் இல்லை' என்று பிரமோத் மஹாஜன் வேடிக்கையாக குறிப்பிடுவார். எனினும் அதில் ஒரு உண்மை இருக்கிறது. அது போலவே வலைப்பதிவென்பது இதுதான், என்று கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தால் இந்த அளவுக்கு பலரும் இத்தனை ஆர்வத்துடன் பங்கெடுத்து...வலைப்பூக்கள் இத்தனை வளர்ச்சியடைந்திருக்குமா என்பது கேள்விக்குறி!

முதலில் முட்டை முழுதாக உடைந்து கோழிக்குஞ்சு வெளிவரட்டும். பின்னர் அதன் தன்மை அறிந்து பெயர் வைக்கலாம். அது போலவே, பலரும் பல கோணங்களில் இவற்றை பயன்படுத்தட்டும். வெல்பவை விதியாக தன்னாலாயே மாறும். பலரின் பாராட்டினையும் பெற்ற பத்ரியின் 'எண்ணங்கள்' அவ்விதமான சில விதிகளை படைக்கும் என்பது என் அனுமானம். அவை எளிமை மற்றும் நிலைத்தன்மை. தொடர்ந்து கவனித்து வருபவன் என்ற முறையில், பத்ரி நல்ல ஒரு திட்டமிடலுடனும், தெளிவான ஒரு நோக்கத்துடனும் தனது வலைப்பதிவினை முன்னெடுத்துச் செல்வதாக என்னால் கூற முடியும். மேலும், பத்ரி 'தனது வலைப்பதிவானது வழக்கமாக இணையத்தில் வலம் வரும் நடுத்தர, மேல் நடுத்தர இளைஞர் பட்டாளத்தைக் கடந்து விரைவில் ஏற்படவிருக்கும் இணையத் தொடர்புப் புரட்சியின் துணை கொண்டு தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் இருக்கும் சாதாரண மக்களைச் சென்றடைந்து....இதன் மூலம் ஒரு சமூக, அரசியல் நிலைப்பாடுகளில் ஒரு பொதுக்கருத்தினை உருவாக்கும் வேண்டும்' என்ற எண்ணம் கொண்டவராக தெரிகிறார். அதற்குத் தேவை நல்ல தமிழ். தோற்றத்தில் எளிமை. நிலைத்த தன்மை. நிலைத்த தன்மை என்பது தொடர்ந்து அங்கு பதியப்படும் பதிவுகள் அனைத்துமே
பெரும்பாலும்...நான் கூறிய அந்த நோக்கத்தினை நோக்கிய செயல்பாடுகளாகவே இருப்பது.

இவ்வகையான நிலைத்த தன்மைக்காக பலர் மெனக்கெடுவது புரிகிறது. இதன் காரணமாகவே, ஒருவரே பல வலைப்பதிவுகளை வைத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். ஒரு வலைப்பதிவினையே இதோ என்னைக் கவர்ந்த பெண்களைப் பற்றி எழுதப் போகிறேன் என்று நம்மையெல்லாம் கிடப்பில் போட்டுச் சென்ற நம்ம பாலாஜி பாரிபோன்றவர்கள் இருக்கையில், மூன்று நான்கு
வலைப்பதிவுகளை எப்படித்தான் சமாளிக்கிறார்களோ? (பாரியின் உறுமி மேளம் மறுபடி உறுமத்
தொடங்கி விட்டது. தனது மதிப்பிற்குறிய கோமதி டீச்சரைப் பற்றி ஆரம்பித்தவர், ஆரம்பித்த
வேகத்திலேயே தொடரும் போட்டிருக்கிறார்)

இவ்விதமான மல்ட்டி டைமன்ஷனல் வலைப்பதிவுகளில் ஏழு பதிவுகளுடன் முதலிடத்தில் இருப்பவர்
சந்திரவதனா. 'படித்தவை' என்று ஒரு பதிவிருப்பதால் அவரது பதிவுகளில் எதைப் பற்றி எழுதுவது என்பதில் சிரமமிருக்கவில்லை. முள்ளுக்கம்பிகளுக்கு பின்னே மகனை அணைத்தபடி இருக்கும் ஈராக் போர்க்கைதியின் படம் உள்ளத்தை உருக்குகிறது. ஆனாலும் பெரும்பாலோனார் ஏற்கனவே இப்படத்தை பார்த்திருக்கலாம். பெண்ணென்று பூமிதனில் என்று ஒரு சுட்டி! சொடுக்கினால் மு.பொன்னம்பலன் என்பவரின் வலைப்பதிவில் பதிந்துள்ள அமிர்தானந்தமாயி அம்மாவின் உரை! புதிதாக அந்த உரையில் ஏதும் கூறியிருப்பதாக தெரியவில்லை. அடுத்து முஸ்லீம் சமூகத்தினை சேர்ந்த ஜுனைதா பேகம் என்ற எழுத்தாளரைப் பற்றிய கட்டுரை.... ஆச்சரியமான தகவல்கள். முக்கியமானது பெரும் புகழ் பெற்ற எழுத்தாளரான இவர் படித்தது மூன்றாம் வகுப்பு வரைதானாம்.

பின்னர் சில புகைப்படங்கள் இருக்கின்றன. புகைப்படக்காரர் சந்திரவதனா இல்லை என்பது புரிகிறது. ஆனாலும், ஏன் இப்படங்கள் இவரை பாதித்தது, அல்லது ஏன் இவர் இவற்றை ரசித்தார் என்று மனதை சற்று திறந்து வைத்திருந்தாரானால்.....வலைப்பதிவு மேலும் அர்த்தமுள்ளதாயிருந்திருக்கும்.

"ஆர்கைவ்" கிடங்கின் இடையே தோண்டினால் திறந்த பக்கத்தில் சிறுமியின் சிறுநீரக அறுவைச்
சிகிச்சைக்காக பண உதவி வேண்டும் புகைப்படத்துடன் அறிவிப்பு. சிறுமிக்கு வேண்டிய உதவி இதற்குள் கிடைத்திருக்கட்டும். நடுத்தர் குடும்பத்தை சேர்ந்த பலர் இன்னமும் இறந்தகாலத்திலேயே இருக்கிறார்கள். ஒரு சாதாரண இரத்த சோதனைக்கே ஆயிரம் ரூபாய் வரை மும்பையில் கேட்கிறார்கள். எந்த ஒரு அறுவை சிகிச்சையானாலும் சாதாரணமாக ஐம்பதாயிரம் ஆகிறது. இனி மருத்துவ காப்பீடு செய்து கொள்வது இங்கும் வளர்ந்த நாடுகளைப் போல அவசியம் என்பதை நன்கு படித்து நல்ல வேலையில் இருப்பவர்களே உணர மறுக்கிறார்கள். வருடம் சுமார் ஐயாயிரம் ரூபாய் போனால் போகிறது....மருத்துவ செலவு என்று வந்தால் யாரிடமும் சென்று நிற்க வேண்டாம் என்ற மன நிம்மதிக்காக இந்த விலையை கொடுப்பதில் தவறில்லை.

நான் சிறுவனாக இருக்கையில் தனியார் மருத்துவ மனைகளில் 'இது சிக்கலான கேஸ். நீங்க
பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போங்க' என்று கூறுவார்கள். பெரிய ஆஸ்பத்திரி என்பது அரசு மருத்துவமனைகள். நான் வீட்டிலும் எனது தங்கை அரசு மருத்துவமனையிலும் பிறந்தோம். இப்போது அரசு மருத்துவமனைக்கு மனைவியை அழைத்துக் கொண்டு செல்வதை நினைத்துப் பார்க்க இயலுமா? நமது பொருளாதார நிலை உயர்ந்து விட்டது என்பதை விட அரசு மருத்துவமனைகளின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது என்பதுதான் காரணம். 7000 கோடி ரூபாய்க்கு ஒரு பொம்மைக் கப்பலை வாங்க ஏழை மக்கள் கொடுக்கும்
விலை, மருத்துவ வசதியின்மை!!!

வருமான வரி கட்டுபவர்களுக்கு சிறையில் முதல் வகுப்பு கொடுக்கிறார்கள். ஆனால், இவ்வாறான மருத்துவ உதவி தேவைப்படும் காலத்தில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு அறையாவது கொடுக்கலாம் அல்லவா? வருமான வரி கட்டவும் பலர் முன் வரலாம். ஹ¥ம்....

அன்புடன்

பிரபு ராஜதுரை

Freitag, März 19, 2004

சங்கடப்படுத்திய சிறுகதை

நாம் எத்தனையோ விடயங்களுக்காகக் கலங்குகிறோம். கண்ணீர் வடிக்கிறோம். ஆனால் வழமை போலப் பேச்சாகவோ, வெறும் செய்தியாகவோ இல்லாது மரணம் என்ற ஒன்று நியமாகவே எம் வாழ்வில் குறுக்கிடும் போதுதான் நாம் இத்தனை காலமும் அர்த்தமின்றி அநாவசியத்துக்குக் கண்ணீர் வடித்தோம் என்பதைப் புர்஢ந்து கொள்கிறோம். வார்த்தைகளில் வடிக்க முடியாத அந்த வலியில் துவண்டு போகிறோம்.

அதி உச்ச மனவலியைத் தரக் கூடிய வலிமை இந்த மரணம் என்ற கொடிய நிகழ்வுக்கு உண்டு. இந்தத் திணறல்கள் கதையும் அப்படியான ஒரு உச்ச வலியைச் சொல்ல முனைகிறது. சொல்லாது விட்ட, செய்யாது விட்ட விடயங்களை பி஡஢ய உறவொன்றின் மரணத்தின் பின் நினைந்து நினைந்து ஆதங்கப்படும் மனதின் ரணத்தை - அன்று இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாம். நான் தப்புச் செய்து விட்டேன்.. ஖ என்பது போன்றதான ஒரு சில வா஢கள் எடுத்துக் காட்டுகின்றன. வாசிக்கத் தொடங்கிய பின் நிறுத்த மனமில்லாது கதையோடு மனசு ஓடுகிறது. என்ன நடந்து விட்டது? இறந்து விட்டாளா..? இறந்து விட்டாளா என முடிவை அறிய மனசு அவசரப் படுகிறது. இருந்தாலும் அவசரப் படாது எழுத்தோடு பயணித்து முடியுந் தறுவாயில் அது ஒரு உண்மைக் கதை என்பது தொ஢ந்த போது மிகவும் சங்கடமாகி விட்டது.

சந்திரவதனா

யேர்மனி
Quelle - http://www.thisaigal.com/sep03/uniletters.html

Sonntag, März 14, 2004

வாருங்கள் வாருங்கள்

வாருங்கள் வாருங்கள்

நண்பர்களே,

வணக்கம்!

கடந்த எட்டுமாதங்களாக எதிர்பார்த்ததையும்விட உங்களனைவரின் ஆதரவோடும், அரவணைப்போடும் இந்த வலைப்பதிவு நடந்து வந்தது. இந்த வலைப்பதிவை ஆரம்பித்தபோது இத்தனை பெரிதாக வளரும் என்றோ, இவ்வளவு நாட்கள் தொடர்ந்து நடக்கும் என்றோ நினைக்கவில்லை. தொடக்க நாட்களில் தமிழில் எப்படி எழுதுவது, யூனிகோடில் எப்படி எழுதுவது என்பதே சிக்கலாக இருந்தது. இந்த எட்டுமாதங்களில் பற்பல மாற்றங்களை தமிழ்வலைப்பதிவாளர்களோடு இந்த வலைப்பதிவும் எதிர்கொண்டது.

வலைப்பூவில் ஆசிரியர்களாக வந்து தொடக்கி வைத்து ஒத்துழைத்த சந்திரவதனா, மீனாக்ஸ், பரி ஆகியோருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லவேண்டும்.

இதுவரை ஆசிரியராக இருந்தவர்கள்

1. 09/21 - 09/27: சந்திரவதனா
2. 09/28 - 10/04: மீனாக்ஸ்
3. 10/05 - 10/11: பரிமேலழகர்
4. 10/12 - 10/18: சுபா
5. 10/19 - 10/25: காசி ஆறுமுகம்
6. 10/26 - 11/01: வெங்கட்ரமணி
7. 11/02 - 11/08: கிருபாஷங்கர்
8. 11/09 - 11/15: வினோபா கார்த்திக்
9. 11/16 - 11/22: ராமச்சந்திரன் உஷா
10. 11/23 - 11/29: நவன்
11. 11/30 - 12/06: டாக்டர் நா.கண்ணன்
12. 12/07 - 12/13: பாஸ்டன் பாலாஜி
13. 12/14 - 12/20: எம்.கே.குமார்
14. 12/21 - 12/27: ரவியா
15. 12/28 - 01/03: பவித்ரா
16. 01/04 - 01/10: சித்தார்த் வெங்கடேஷ்
17. 01/11 - 01/17: ஹரன் பிரசன்னா
18. 01/18 - 01/24: சங்கர்
19. 01/25 - 01/31: கார்த்திக்ராமாஸ்
20. 02/01 - 02/07: பத்ரி சேஷாத்ரி
21. 02/08 - 02/14: பாலாஜி பாரி
22. 02/15 - 02/21: 'ஐகாரஸ்' பிரகாஷ்
23. 02/22 - 03/07 முத்து
24. 03/08 - 03/13 அருணா ஸ்ரினிவாசன்

மேலே இருக்கும் பட்டியலை தமது வலைப்பதிவில் வெளியிட்டு கூடியசீக்கிரம் வலைப்பூவில் இருபத்தைந்தாவது ஆசிரியர் வரப்போகிறார் என்று அறியத்தந்தவர் நமது பாபா. நன்றி பாலாஜி.

நாளைக்கு யார் ஆசிரியராக வரப்போகிறார்கள்? அனைவரும் ஆவலாகக் காத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதை நாளைக்கு காசி சொல்வார்.

இப்ப நீ இன்னாத்துக்குமே வந்துகீறே'னு கேக்குறீங்களா?

நாளையில் இருந்து வலைப்பூ வேறிடத்தில் வெளிவர இருக்கிறது.

http://valaippoo.yarl.net

மூவபிள் டைப்பை தமிழ் வலைப்பதிவாளர்கள் இலவசமாக வழங்கும் சுரதாவிற்கு நன்றி.

இப்போதிருக்கும் ப்ளாக்ஸ்பாட்டை விட மூவபிள் டைப் வலைப்பதிவு மிகவும் சௌகரியமாக இருக்கும் என்று நினைக்கிறேன். புது இடத்தில் ஏதேனும் அசௌரியங்கள் இருந்தால் தெரிவியுங்கள்.

நன்றி.

அன்புடன்,
மதி

அனுப்பியவர் mathy
காலம் March 14, 2004 12:26 PM

Montag, März 01, 2004

(Feb 22 - 28) - முத்து

மருத்துவச் செய்திகளைத் தொகுத்துக் கொடுக்கும் சந்திரவதனா, பல வலைப்பூக்கள் வைத்திருப்பதலோ என்னவோ இங்கு அடிக்கடி எழுதுவதில்லை.

முத்து
posted :Sunday, February 29, 2004 : 17:38

--------------------------------------------------------
மறுமொழி
--------------------------------------------------------
Chandravathanaa (http://manaosai.blogspot.com) @ 02/29/2004 15:02:
முத்து

இங்கு வந்து எழுதுவது குறைவானாலும் தினமும் தவறாது இப்பக்கத்தைத் தரிசிக்கிறேன்.
முடிந்தவரை ஒவ்வொரு வலைப்பூவையும் நுகர்கிறேன்.

நீங்கள் எழுதுங்கள்.

நட்புடன்
சந்திரவதனா
--------------------------------------------------------
மறுமொழி
--------------------------------------------------------
suratha (http:/aayutham.blogspot.com) @ 03/01/2004 01:26:
குடிலின் பன்முகம் இன்னமும் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை.நாட்குறிப்பாக எழுதத்தொடங்குவதாலேயே இந்த தேக்கம் ஏற்படுகிறது என எண்ணுகிறேன். .
காசியின் தொழில்நுடப விரிவாக்க சமாச்சாரங்கள் தனியாக பதியப்படவேண்டும்.சங்கரின் டிகிற்றால் கமரா பற்றிய செய்தியும் உள்ளிட்டால் இலத்திரனியல் சாதனங்கள் பறற்றிய ஒரு தொகுப்பாக அமையும்.
தமிழுக்கும் வலைமுகம் ஏறுமுகமாக அமையும்.
பத்ரி,பாலாஜி,ச.வதனா போன்றவர்கள் சரியாகப் பயன்படுத்துகிறார்கள்.மற்றையோர் தொழுதுண்டு பின் செல்வோம்.