Mittwoch, Februar 18, 2004

ரவியா 21.12.2003 - 27.12.2003

Thursday, December 25, 2003

ஒரு அழகான கவிதை. என்னுது இல்ல..காப்பி அடிச்சதுத்தான். அந்த கவிதையை சொல்லிட்டு செய்தி வாசிப்பவர்கள் மாதிரி by the way சொல்லி நம்ம சந்திரவதனா க்கு வரலாம் என்றிருந்தேன். ஏழு வலைப்பூக்கள் எப்படித்தான் பராமரிக்கிறார்களோ ?

(உங்கள் பேரக் குழந்தை நல்ல வடிவு (புரியுதா உஷா) சந்திரா.)

அது மட்டும்மிலாமல் இந்த இடத்தில் கதைக் கதையாய் கதைக்கிறார். கணேஸ் மாமா வுடன் பருத்தித்துறை தோசைக்கு சாப்பிடாமலே நான் அடிமை. அவ்வளவு ருசியா சந்திரவதனா ?
சாப்பிட்டவுடன் சூடாக ஒரு 'றீ' குடித்தால் எப்படியிருக்கும்?
மதியுடன் சூள் கொட்டுன்ன மாதிரி இவர்க்கதைகளில் சப்பு (slurp slurp )கொட்டலாம்.

அவரின் பொட்டு கிளாஸ் கதையை படித்திருக்கிறீர்களா ? என்னை மிகவும் பாதித்த கதை. இலங்கையிலும் சாதி வேற்றுமையிருக்கும் என்று எனக்கு தேரியாது. அருமையான் கதை ! சினிமா இயக்கினர்கள் இரண்டு விரல்களை lens போல் பாவித்து angle பார்ப்பார்களே அதுப்போல் திரைப்பட (குறும் படம்) மாகவே ( கிரேன் ஷாட் உள்பட) படித்தேன். இல்லை பார்த்தேன்.

விமர்சன பகுதியிலும் எழுதியுள்ளேன். கதையை படித்து (பார்த்து) விட்டு படியுங்கள்.

கடைசி ஷாட்பா..

எல்லாம் ரெடியா பி.சி ?( நம்ம P.C SriRam தான்)

இந்த கிளாஸை Close-up ல காட்டி அப்படியே Blur அல்லது Fade out பண்ணி Zoom out பண்ணிங்கனா A film by Raviaa போட்டு அப்படியே ..Final Credits போட்டுலாம்...

ரவியா?? : மூலக் கதை சந்திரவதனா என்று கட்டாயம் போடனுமா ரவியா!! ?

(இன்னுமா தூக்கம்...ஏந்திரி ஏந்திரி... சரியான் துங்கு மூஞ்சி)

உங்கள் ரவியா

-------------------------------------------------------------------------------------
மறுமொழி

பெயரிலி () @ 12/24/2003 12:04:
ஏமண்டி விருமாண்டி ஒரு ஸாங்கு மட்டும் ஜோராண்டி. ஒன்னைவெட இந்த் ஒலகத்தில் எனக்கென்று யாருமில்ல (சரிகாம்மாவும் பூட்டுது சிம்ரன் கட்டிக்கிட்டுது கௌதமி என்னாச்சுதுபா?) சந்திரவதனா அக்கா இலங்க ரமணி சந்திரன் லச்சுமி ஸடெப்ப கடந்து சிவசங்கரி இந்துமதி வாஸந்தி பார்ட்டி அந்த ரேஞ்சுக்குமேல அம்ப ராசம் கிருச்ணன் மாதிரில்லாம் எயுத மாதிரி தெர்யல்ல. புலி ·பைட்டர் அப்த்தி எழுதுறதுமட்டும் கொஞ்சம் டிபெரண்டா காட்டுது. அம்புட்டுத்தேன்.

Mittwoch, Februar 11, 2004

(Feb 08 - 15) - பாலாஜி-பாரி

Wednesday, February 11, 2004
புதிய பதிவுகள் -2


சந்திரவதனாவின் சுதந்திரம் பற்றிய கவிதையில் தெரியும் உண்மை அதிரச் செய்கின்றது. அவர் காட்டியுள்ள சுட்டியில் திரு. கண்ணன் அவர்களால் இடப்பட்ட "காதலா? கடமையா?" நாவல் எழுதிய சித்தி என்ற ஆச்சிம்மா பற்றிய குறிப்பு உள்ளது. இதை அனைவரும் பார்க்கவும். மூன்று வகுப்பு மட்டுமே படித்த இந்த முதிய பெண்மணி பலரின் மனதில் நம்பிக்கைகளை தோற்றுவிப்பார் என நம்புகின்றேன். அட! இவர் நாகூர் ரூமியின் உறவாமே!! :-) சந்திரவதனாவின் மாவீரர்கள் வீரப் பூவும் முக்கியமானது. இவரது இரசனையை இரசிக்க படித்தவை...குறிப்பாக எழில்நிலா கவிதை. மிக இயல்பாக, சூரிய ஒளியில் பளீரிட்டு அமைதியாய் இருக்கும் பூ போல இருக்கின்றது. தொல்கால சுடு மண் சிற்பங்கள் பற்றி இங்கே காண்க. இது அந்த பகுதியின் தொல் பொருள் ஆர்வத்தை தூண்டுகின்றது.

-பாரி
posted by Editor : 16:56

(Feb 08 - 15) - பாலாஜி-பாரி

புதிய பதிவுகள்

சந்திரவதனாவின் ஓர் சிறப்பான முயற்சி..... கவிஞர் தீட்சண்யனின் கவிதைகளை இங்கே பதிகின்றார். கருத்தாழமிக்க வார்த்தை ஜாலங்கள்.

posted by Editor : 14:57

(Dec 14 - 20) - எம்.கே.குமார்.

தீட்சண்யன் கவிதைகளில் நெருப்பு பறக்கிறது. காலமாகிவிட்ட அவரது கனவு பலிக்க வேண்டுவோம்.
எம்.கே.குமார்.

# posted by Editor : 10:38
(Dec 14 - 20) - எம்.கே.குமார்.