Donnerstag, Juni 17, 2004

மார்க் ஷீட் -5 - Jeyanthi

June 16, 2004

தமிழ் இணைய உலகில் ஆக அதிகஎண்ணிக்கை வலைப்பூக்களை வைத்திருக்கிறார் சந்திரவதனா செல்வகுமரன் என்றே தோன்றுகிறது. அதல்ல பெரியவிஷயம். அவற்றை ரசிக்கக் கூடியவகையில் தொடர்ந்து புதுப்புது செய்திகளை இட்டு பளிச்சென்று மெச்சும்படி வைத்திருக்கிறார். பெருமையாக இருக்கிறது ! பிரமிப்பாகவும் கூட! ஒரே ஒரு சின்னக்குறை. அதுகூட இல்லை, இது என் கருத்து மட்டுமே. பதிவுகளின் முக்கியப்பகுதியை மட்டும் இட்டு 'மேலும் படிக்க' என்ற சுட்டி கொடுத்தால் ஒரே பக்கத்தில் சட்டென்று விவரங்கள் கிடைக்கும். இது எல்லா வலைப்பதிவு உரிமையாளர்களும் பின்பற்றினால், வலை மேய்பவர்கள் என்னதான் அவசரத்தில் இருந்தாலும், பத்தில் ஒரு தலைப்பாவது அவர்களை ஈர்க்கும் என்று நினைக்கிறேன்.வாசகவட்டம் விரியும்.

சரி,.. இனி
----

மார்க் ஷீட் -5

மகளிர்--regularity - 89% , content- 88% , லேயவுட் - 90% , Organisation -- 89%,மொத்தம் -- 89%
பிடித்தது -- லேயவுட் /ஒரு தேர்ந்த மருத்துவரின் வைப்பதிவைப்போலிருப்பது.

மனவோசை--regularity - 87% , content- 88% , லேயவுட் - 89% , Organisation -- 89% ,மொத்தம் --88.25%
பிடித்தது --சூப்பரான புகைப்படங்கள் ! மற்றும் அழகிய லேயவுட்

மாவீரர்கள்--regularity - 85% , content- 88% , லேயவுட் - 87% , Organisation -- 90%,மொத்தம் --87.5%
பிடித்தது -- மாவீரர்களின் பால் உள்ள அக்கறை. படிக்கப்படிக்க வேதனையாகயிருந்தது.

படித்தவை--regularity - 78% , content- 90% , லேயவுட் - 81% , Organisation -- 88% ,மொத்தம் --84.25%
பிடித்தது -- பகிர்ந்துகொள்ள விழையும் ஆர்வமும் மனிதநேயமும்! ஜனா என்னை மிகவும் நெகிழ வைத்தான்.

பெண்கள்--regularity - 88% , content- 89% , லேயவுட் - 88% , Organisation -- 89%,மொத்தம் -- 88.5%
பிடித்தது -- பெண்ணினத்துக்குக் கொடுக்கும் நியாயமான குரல்!

Rehabilitation--regularity - 87 % , content- 89 %, லேயவுட் - 87% , Organisation --89% ,மொத்தம் --88%
பிடித்தது -- அன்றாடம் பிறந்த மண்ணில் நடப்பவற்றில் கொள்ளும் அக்கறை

Sammlung--regularity - 76% , content- 87% , லேயவுட் - 87% , Organisation -- 89%,மொத்தம் --84.75%
பிடித்தது -- வகைவகையான தலைப்புகள்!

அப்பாடா, எல்லாருக்கும் மார்க்ஸ் போட்டாச்சு (படிக்கமுடியாத பதிவுகளைத்தவிர)!
இனிமேல், கொல்லென்று இந்தவாரம் புதிதாய்ப் பூத்திருக்கும்
சிலமலர்களை முகர்ந்து எழுதவேண்டும். நேரமிருந்தால்,
இன்றைக்கே. இல்லையானால், நாளைக்கு எழுதினாப் போச்சு,..

அனைத்துப் பதிவுகளும் http://tamilblogs.blogspot.com என்ற பட்டியலில் படிக்கக்கிடைக்கும்.

வணக்கங்கள். என்றும் அன்புடன், ஜெயந்தி சங்கர்.

Posted by Jeyanthi at June 16, 2004 07:39 PM