Mittwoch, Februar 11, 2004

(Feb 08 - 15) - பாலாஜி-பாரி

Wednesday, February 11, 2004
புதிய பதிவுகள் -2


சந்திரவதனாவின் சுதந்திரம் பற்றிய கவிதையில் தெரியும் உண்மை அதிரச் செய்கின்றது. அவர் காட்டியுள்ள சுட்டியில் திரு. கண்ணன் அவர்களால் இடப்பட்ட "காதலா? கடமையா?" நாவல் எழுதிய சித்தி என்ற ஆச்சிம்மா பற்றிய குறிப்பு உள்ளது. இதை அனைவரும் பார்க்கவும். மூன்று வகுப்பு மட்டுமே படித்த இந்த முதிய பெண்மணி பலரின் மனதில் நம்பிக்கைகளை தோற்றுவிப்பார் என நம்புகின்றேன். அட! இவர் நாகூர் ரூமியின் உறவாமே!! :-) சந்திரவதனாவின் மாவீரர்கள் வீரப் பூவும் முக்கியமானது. இவரது இரசனையை இரசிக்க படித்தவை...குறிப்பாக எழில்நிலா கவிதை. மிக இயல்பாக, சூரிய ஒளியில் பளீரிட்டு அமைதியாய் இருக்கும் பூ போல இருக்கின்றது. தொல்கால சுடு மண் சிற்பங்கள் பற்றி இங்கே காண்க. இது அந்த பகுதியின் தொல் பொருள் ஆர்வத்தை தூண்டுகின்றது.

-பாரி
posted by Editor : 16:56

(Feb 08 - 15) - பாலாஜி-பாரி

புதிய பதிவுகள்

சந்திரவதனாவின் ஓர் சிறப்பான முயற்சி..... கவிஞர் தீட்சண்யனின் கவிதைகளை இங்கே பதிகின்றார். கருத்தாழமிக்க வார்த்தை ஜாலங்கள்.

posted by Editor : 14:57

(Dec 14 - 20) - எம்.கே.குமார்.

தீட்சண்யன் கவிதைகளில் நெருப்பு பறக்கிறது. காலமாகிவிட்ட அவரது கனவு பலிக்க வேண்டுவோம்.
எம்.கே.குமார்.

# posted by Editor : 10:38
(Dec 14 - 20) - எம்.கே.குமார்.