S. அருள் குமார்
சென்னை, இந்தியா.
Tuesday, November 21, 2006
http://whatiwanttosayis.blogspot.com/2006/11/blog-post_21.html
By chandravathanaa, at Fri Nov 24, 11:19 AM
நல்ல பதிவு அருள்குமார்.
வாசிக்க வாசிக்க நீண்டு கொண்டே போன பதிவை, இடைநிறுத்தவும் முடியாத விதமாக எழுதியிருக்கிறீர்கள்.
திருமண பந்தந்தில் சுதந்திரம் பறிக்கப் படுவது தவிர்க்க முடியாததே. விட்டுக்கொடுப்புகளாலும் புரிந்துணர்வுகளாலும் மட்டுமே அதைச் சரிப்படுத்த முடியும்.
பெண்கள் தங்கள் சுதந்திரம் பற்றிய நினைவேயில்லாத, ஆண்களைச் சார்ந்திருப்பதே அழகென்று நினைத்திருந்த காலம் வரை, குடும்பம் என்கிற அமைப்பு நன்றாகவே இயங்கிவந்திருககிறது.
மிகச்சரியான கருத்து. ஆனாலும் இங்கும் சிலரால் புரிந்து கொள்ள முடியாத பிரச்சனைகளும் இருக்கின்றன. எல்லோருமே அப்படி வாழ்ந்த பெண்கள் எல்லோரும் மிக மகிழ்வாக வாழ்ந்ததாகவே கருதுகிறார்கள். அதை நூறுவீதம் திடப்படுத்தியும் எழுதுகிறார்கள். ஆனால் இப்படி வாழ்ந்த பெண்களில் பலர், குடும்பம் குலையாமல், குடும்பத்தில் உள்ள அத்தனை பேரையும் திருப்திப் படுத்திக் கொண்டு தமக்குள் குமுறிக் கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள். இந்த உண்மையைப் புரிந்து கொண்டவர்கள் வெகுசிலரே. அந்தக் காலத்தில் குடும்ப அமைப்பு நன்றாகவே இயங்கி வந்திருக்கிறது. அதுசரி. அத்தனை பெண்களும் சந்தோசமாக வாழ்ந்தார்களா என்பது கேள்விக் குறியே.
உஷா குறிப்பிட்டது போல பிள்ளைகள் வளர்ந்த பின் அவர்களால் ஒரு பெண் பலம் பெறுகிறாள். அங்கே எவ்வளவுதான் துள்ளிக் குதிக்கும் கணவனாக இருந்தாலும் அவன் கொஞ்சமேனும் அடங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
அகிலாவின் குடும்பம் மகிழ்ச்சியை எமக்கும் தரக் கூடிய குடும்பம்.
Keine Kommentare:
Kommentar veröffentlichen