யேர்மனியில் மாவீரர் பெற்றோர் மற்றும் மாவீரர் குடும்பத்தினர் கௌவிரப்பு.
திங்கள் 27-11-2006
இன்று 27.11.06 அன்று யேர்மனியில் உள்ள வூப்பெற்றால் நகரில் மாவீரர் குடும்பத்தினர் கௌரவிக்கப்பட்டார்கள்.
இன்று மதியம் 12.30 மணிக்கு தேசியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பித்து இந் நிகழ்வில் தேசியக்கொடியினை கப்டன் மொறிஸ், மற்றும் கப்டன் மயூரன் ஆகிய மாவீரர்களின் தாயார் திருமதி.தியாகராஜா ஏற்றிவைத்தார்.
இதனை தொடர்ந்து தேசியத்தலைவர் அவர்களின் மாவீரர்நாள் உரை நேரஞ்சலாக திரையில் காட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது பொது ஈகைச்சுடரினை மாவீரர் திருஞானசம்பந்தர் கஜேந்திரராஜனின் சகோதரி திருமதி கஐதீஸ்வரி குமணன் ஏற்றி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அங்கு வருகை தந்திருந்த மாவீரர் குடும்பத்தை சார்ந்தவர்கள் மாவீரர்களின் நினைவுகளை மீட்டது மிகவும் உணர்வு பூர்வமாக இருந்தது. வித்தாக வீழ்ந்த மாவீரர்களின் கனவான தமிழீழத்தை அடைவதே எமது விருப்பம் என மாவீரர் குடும்பத்தை சார்ந்தவர்கள் கூறியதை காணக்கூடியதாகவிருந்தது. தேசியக்கொடி இறக்கி வைக்கப் பட்டதுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.
Keine Kommentare:
Kommentar veröffentlichen