Dienstag, Juli 06, 2004

நானும் வலைப்பதிவுகளும்..... - nirviyam

நான் தினமும் office வந்தவுடன் office mail check பண்ண முதல் திறந்து பார்ப்பது சந்திரவதனாவின் வலைப்பதிவு தான். அவர்கள் எழுத்துக்களை வாசிக்கும் போது ஊரில் உறவாடுவது போல் ஒரு சந்தோஷம். (ஐயோ மற்றவர் பதிவுகழும் வாசிப்பேன். எனினும் எனது Best choice சந்திரவதனாவினுடையதுதான்!!!!)

யாழ்ப்பாணத்தை விட்டு 10 வயசில் கொழும்பு வந்தாகியாயிற்று. 21 வயதில் கனடா வாசம். அதுவும் Calgary, Alberta.

இங்கு தமிழில் எதுவுமே கிடையாது. 5 வயதில் தொடங்கிய புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் 15, 16 வயதிலிருந்து ஒரு வித வெறியாகவே மாறிவிட்டது. எதுவும் படிக்காமல் தூங்கவே முடியாது. ராஜேஷ்குமாரில் தொடங்கி, லக்ஷ்மி, சுஜாதா, ரமணி சந்திரன், சாண்டிலியன், கல்கி ???சங்கரி, இந்துமதி கடைசியாக பாலகுமாரன். பரிட்சைக்குப் படிக்கும் போது கூட நல்லதொரு கதைப்புத்தகம் கிடைத்துவிட்டால் ஒரே மூச்சில் அதனை வாசித்தபின் தான் பாடங்களே.

இங்கு வந்தபின் மூளைப் பிசாசு தமிழ், தமிழ் என்று என்னை ரொம்பவே படுத்தி எடுத்து விட்டது. online இல் குமுதம், ஆனந்தவிகடன் அது இது என்று அப்பப்போ அதற்கு தீனி போட்டும் அடங்கவில்லை. தமிழில் ஒரு துண்டுப்பிரசுரம் கிடைத்தால் (Toronto விலிருந்து parcel ஏதாவது சுற்றி வரும் paper) கூட அவாவினால் விழுந்தடித்து வாசிப்பது வழக்கம்.

கடைசியாக ஊருக்குப் போன போது எனது suitcase நிறைய புத்தகங்கள். பொன்னியின் செல்வனும் அடக்கம். (6ம் வகுப்பில் முதல் தடவை வாசித்தது கடைசியாக வசித்தது 10வது தடவை என நினைக்கிறேன்.) எல்லாம் ஒரிரு வாரங்களிலெயே வாசித்து முடித்தாயிற்று.

Internet ல் மேய்கையில் ஒரு தடவை அகப்பட்டது சந்திரவாதனாவின் வலைப்பதிவு. அதிலிருந்து மற்றவர்களின் வலைப்பதிவுகளின் அறிமுகம். இப்போதெல்லாம் என் மூளைப் பிசாசு என்னை அதிகமாகப் படுத்துவதில்லை. சமர்த்தாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் வலைப்பதிவுகளை மேய்ந்து ஆரவாரிக்கிறது.

சரி நம்ம மூளைப் பிசாசிற்கு இன்னும் கொஞ்சம் தீனி போடலாமே என்று இந்த வலைபதியும் வேலையை அடியேனும் ஆரம்பித்தேன். ஒவ்வொரு எழுத்தினை அடிக்கவும் நீண்ட நேரம் எடுப்பது போல தெரிகிறது.

"முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்" -இப்பொழுது கொஞ்சம் keyboard பழக்கத்திற்கு வருகிறது. ஆனாலும் தேடித் தேடி type பண்ணும்போது கவனம் சிதறுகிறது. Keyboard இன்னும் கொஞ்சம் பழகினால் நிறைய எழுதலாம்....அதாவது சீராக Intersting ஆக எழுதலாம்.

10 நாட்கள் Toronto போகிறேன். உற்ற நண்பியின் திருமணம். மற்ற நண்பியருடன் கும்மாளம். மிகுதி விரைவில்......

Posted by nirviya at June 24, 2004 09:54 PM

comments
நிர்வியா

உங்களைப் போலத்தான் நானும்.
யேர்மனிக்கு வந்த காலங்களில் தமிழ் எழுத்துக்களையோ தமிழ் பேசும் மனிதர்களையோ காண்பதென்பது மிக மிக அரிது. எங்காவது ஏதாவது வெளி வந்தாலும் என் கைக்கு அவை கிடைப்பதில்லை. அந்தச் சமயங்களில் எனக்கு வாசிப்புத்தாகத்துக்கு தீனியாக யேர்மனியப் பத்திரிகைகளே கிடைத்தன. விளங்குதோ விளங்கவில்லையோ வாசித்துத் தள்ளுவேன்.
சிலசமயங்களில் அகராதியைத் தலைகீழாகப் புரட்டியும் வாசித்த விடயத்தின் பொருள் விளங்காது
தலையைப் பிய்த்துக் கொள்வேன்.ரோட்டிலே ஒரு துண்டுப் பேப்பர் பறந்து சென்றாலே எடுத்து வாசிக்கத் தொடங்கி விடுவேன். இப்போது கூட எனது யேர்மனிய நண்பிகள் அதைச் சொல்லிச் சிரிப்பார்கள்.

நட்புடன்
சந்திரவதனா

Posted by: chandravathanaa at June 27, 2004 11:39 AM

Keine Kommentare: